மாசி வீதிகளில் 'பார்க்கிங்' கட்டணம் கூடாது வணிகர்கள் வலியுறுத்தல்

Added : பிப் 09, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
மதுரை -மதுரை மீனாட்சி கோயிலை சுற்றியுள்ள மாசி வீதிகளில் டூவீலர், கார்களுக்கு 'பார்க்கிங்' கட்டணம் வசூலிக்கக்கூடாது என மதுரை அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.கூட்டமைப்பின் கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம், கவுரவ செயலாளர் சாய் சுப்ரமணியம் கூறியதாவது: ஏற்கனவே சரக்கு மற்றும் சேவை வரி, தொழில்வரி, குடிநீர், பாதாள சாக்கடை, சொத்துவரி, சாலைவரி, மின்கட்டண



மதுரை -மதுரை மீனாட்சி கோயிலை சுற்றியுள்ள மாசி வீதிகளில் டூவீலர், கார்களுக்கு 'பார்க்கிங்' கட்டணம் வசூலிக்கக்கூடாது என மதுரை அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம், கவுரவ செயலாளர் சாய் சுப்ரமணியம் கூறியதாவது:

ஏற்கனவே சரக்கு மற்றும் சேவை வரி, தொழில்வரி, குடிநீர், பாதாள சாக்கடை, சொத்துவரி, சாலைவரி, மின்கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வணிகர்கள் தொழில் நடத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.

பொருள் வாங்க வருவோர் 'பார்க்கிங்' கட்டணம் செலுத்த வேண்டுமெனில் வேறு பகுதிகளில் பொருள் வாங்க சென்றுவிடுவர். கடை உரிமையாளர்களும், பணியாளர்களும் மாதந்தோறும் ஒரு தொகையை கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். சரக்கு மற்றும் சேவை வரி வசூல் செய்து தரும் வணிகர்களுக்கு இது கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்பதால் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை மாநகராட்சி கைவிட வேண்டும், என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
09-பிப்-202309:45:04 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மாசி வீதிகளில் பார்க்கிங்கே கூடாது. அப்படீன்னா ஓக்கேவா?. நான் பொறந்து விளையாடி வளர்ந்த இடம் விளக்குத்தூண், தெற்குமாசி வீதி. இப்போ நடக்குறதுக்கே இடமில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X