Sabarimala walk opens on Feb 12 online booking starts | சபரிமலை நடை பிப்., 12ல் திறப்பு : ஆன்லைன் முன்பதிவு துவக்கம்| Dinamalar

சபரிமலை நடை பிப்., 12ல் திறப்பு : 'ஆன்லைன்' முன்பதிவு துவக்கம்

Updated : பிப் 09, 2023 | Added : பிப் 09, 2023 | |
சபரிமலை ;மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை பிப்., 12ல் திறக்கப்படுகிறது. இதற்கான 'ஆன்லைன்' முன்பதிவு தற்போது நடந்து வருகிறது. கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவில் நடையை, பிப்., 12ல் மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி திறந்து தீபம் ஏற்றுவார்.பின் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். அன்று வேறு பூஜைகள் இல்லை. அடுத்த நாள் அதிகாலை 5:00
Sabarimala walk opens on Feb 12 online booking starts   சபரிமலை நடை பிப்., 12ல் திறப்பு : 'ஆன்லைன்' முன்பதிவு துவக்கம்

சபரிமலை ;மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை பிப்., 12ல் திறக்கப்படுகிறது. இதற்கான 'ஆன்லைன்' முன்பதிவு தற்போது நடந்து வருகிறது. கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவில் நடையை, பிப்., 12ல் மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி திறந்து தீபம் ஏற்றுவார்.

பின் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். அன்று வேறு பூஜைகள் இல்லை.


latest tamil news


அடுத்த நாள் அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும், நெய்யபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் துவங்கும். தினமும் அதிகாலை 5:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

பிப்., 17 வரை தினமும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடக்கும்.

அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது நடந்து வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X