சபரிமலை ;மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை பிப்., 12ல் திறக்கப்படுகிறது. இதற்கான 'ஆன்லைன்' முன்பதிவு தற்போது நடந்து வருகிறது. கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவில் நடையை, பிப்., 12ல் மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி திறந்து தீபம் ஏற்றுவார்.
பின் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். அன்று வேறு பூஜைகள் இல்லை.
![]()
|
அடுத்த நாள் அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும், நெய்யபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் துவங்கும். தினமும் அதிகாலை 5:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
பிப்., 17 வரை தினமும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடக்கும்.
அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது நடந்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement