தொப்புள் கொடி துண்டிக்கப்படாத குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்

Added : பிப் 09, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
டமாஸ்கஸ்: மிகக் கடுமையான நிலநடுக்கத்தால் மேற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் பல்லாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் சிலர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர். சிரியாவில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. தொப்புள் கொடி துண்டிக்கப்படாத நிலையில் அந்தக் குழந்தை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு
Newborn baby, alive, Syria earthquake,Miracle,அதிசயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

டமாஸ்கஸ்: மிகக் கடுமையான நிலநடுக்கத்தால் மேற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் பல்லாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் சிலர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர்.


சிரியாவில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. தொப்புள் கொடி துண்டிக்கப்படாத நிலையில் அந்தக் குழந்தை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. அதே நேரத்தில் அந்தக் குழந்தையின் தாய் உயிரிழந்தார்.


latest tamil news

இதுபோன்று சிரியாவில் ஒரு கட்டடத்தின் அடியில், 17 மணி நேரம் சிக்கியிருந்த 7 வயது சிறுமி மற்றும் அவருடைய தம்பி உயிருடன் மீட்கப்பட்டனர். இது தொடர்பாக ஐ.நா., பிரதிநிதி முகமது சாபா, சமூக வலைதளத்தில் படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.


அந்தச் சிறுமி, இடிபாடுகள் இடையே சிக்கியுள்ளார். சுவருக்கு அடியில் சிக்கியுள்ள அந்தச் சிறுமி, தன் தம்பிக்கு காயம் ஏற்படக்கூடாது என்பதற்காக அவனுடைய தலையை பிடித்துள்ளார்.இந்தப் படம் சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

Sureshkumar - Coimbatore,இந்தியா
09-பிப்-202311:29:46 IST Report Abuse
Sureshkumar எல்லாம் வல்ல இறைவா , சிரியா மற்றும் துருக்கி நாடுகளை பேரழிவிலிருந்து காப்பாற்று .
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09-பிப்-202305:16:46 IST Report Abuse
J.V. Iyer எல்லாம் இறைவனின் செயல். பிற்காலத்தில் இந்த குழந்தை நல்லவனாக வளருவானா, இல்லை கெட்டவனா? வளரும் சூழல் இதை தீர்மானிக்கும்.
Rate this:
Srinivasan Indumathi - chennai city,இந்தியா
09-பிப்-202313:24:34 IST Report Abuse
Srinivasan Indumathiநாட்டில் நல்லவைகளை மக்கள் செய்தால் பூகம்பம் வருவதில்லை. எல்லாரும் மோசமான வர்களாக திகழ்வதால் இப்படி தான் நஷ்டத்தை சந்திக்க வரும்....
Rate this:
beindian - doha,கத்தார்
09-பிப்-202316:42:27 IST Report Abuse
beindianAPPO...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X