நாக்பூர்: இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி, நாக்பூரில் இன்று (பிப்.,9) நடக்கிறது. ‛டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் ‛பேட்டிங்' தேர்வு செய்தார். இந்திய அணியில் பரத் மற்றும் சூர்யகுமார் அறிமுகமாகினர்.
அதன்படி, முதல் இன்னிங்ஸை துவக்கிய ஆஸி., அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. 2வது ஓவரின் முதல் பந்தில் சிராஜ்-ன் வேகத்தில் கவாஜா 1 ரன்னில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். அடுத்த ஓவரில் முகமது ஷமி வீசிய பந்தில் வார்னர் (1) ‛கிளீன் போல்டு' ஆனார். 2 ரன்னுக்கு 2 விக்கெட்களை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. இதனைத்தொடர்ந்து ஸ்மித், மார்னஸ் லபுஷேன் ஜோடி நிதானமாக ஆடி வருகிறது. உணவு இடைவேளை வரை ஆஸி., அணி 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது.