''உண்மைகளை திசை திருப்பும் பிரதமர்'': கார்கே குற்றச்சாட்டு

Updated : பிப் 09, 2023 | Added : பிப் 09, 2023 | கருத்துகள் (11) | |
Advertisement
புதுடில்லி: அதானி விவகாரத்தில் நாங்கள் கேட்ட கேள்விக்கு பிரதமர் நேற்று பதிலளிக்கவில்லை. மோடி எப்போதும் உண்மையான பிரச்னையை திசை திருப்புக்கிறார் என காங்., தலைவர் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.ராகுல் பேச்சை சபைக்குறிப்பில் இருந்து நீக்கணும் பார்லி., விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் நேற்று

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: அதானி விவகாரத்தில் நாங்கள் கேட்ட கேள்விக்கு பிரதமர் நேற்று பதிலளிக்கவில்லை. மோடி எப்போதும் உண்மையான பிரச்னையை திசை திருப்புக்கிறார் என காங்., தலைவர் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.




latest tamil news



ராகுல் பேச்சை சபைக்குறிப்பில் இருந்து நீக்கணும்


பார்லி., விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் நேற்று முன்தினம் சபையில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, ஆட்சேபனைக்குரியவை.பார்லிமென்ட் விதிகளின்படி, சபையில் ஒருவர் மீது மற்றொரு உறுப்பினர் குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டுமெனில் முன்கூட்டியே, 'நோட்டீஸ்' அளிக்க வேண்டும்.


இவை எதையும் பின்பற்றாமல், ராகுல் தன் இஷ்டத்துக்கு பேசிய பேச்சுக்களை சபைக்குறிப்பில் இருந்து நீக்கி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.



latest tamil news



நீக்க முடியாது:


இது குறித்து கார்கே பேசியதாவது: லோக்சபாவில் ராகுல் கூறிய கருத்துகளை, அனைத்து விதிகளையும் கருத்தில் கொண்டு நீக்குதல் செய்யப்பட வேண்டும். அவர்கள் எந்த வார்த்தைகளை நீக்க முடியாது என்பதற்கான விதிகள் பற்றி நாங்கள் ஆய்வு செய்துள்ளோம். நான் அவர்களுக்கு 3 பக்க பதில் அளித்துள்ளேன்.


அதானி விவகாரத்தில் நாங்கள் கேட்ட கேள்விக்கு பிரதமர் நேற்று பதிலளிக்கவில்லை. மோடி எப்போதும் உண்மையான பிரச்னையை திசை திருப்புக்கிறார். அதானி எப்படி கோடீஸ்வரரானார். மேலும் அவருக்கு எப்படி கடன்கள் வழங்கப்பட்டன என்ற கேள்விகளை நாங்கள் எழுப்பினோம். ஆனால் பதிலளிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

Sivagiri - chennai,இந்தியா
09-பிப்-202322:33:25 IST Report Abuse
Sivagiri அந்த தோளில் தொங்கும் ஷால் எவவளவு-ன்னு பார்லிமெண்ட்ல கேட்டாங்க - அதுக்கு பதில காணோம்
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
09-பிப்-202322:18:17 IST Report Abuse
venugopal s பிரதமர் மோடி அவர்களுக்கு தெரிந்தது உண்மைகளை திசை திருப்பும் ஒரு வேலை தான், அதையும் செய்யக் கூடாது என்றால் எப்படி?
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
09-பிப்-202321:32:28 IST Report Abuse
g.s,rajan தனியார் நிறுவனங்களை எப்பவும் நம்ப முடியாது ,தொழிலில் நட்டம் ஏற்பட்டால் உடனடியாக இழுத்து மூடிவிட்டு சென்று விடுவார்கள்,வேலை வாய்ப்பும் நிரந்தரமாக இருக்கும் என்று நம்ப முடியாது,நிச்சயம் வேலைக்கு உத்தரவாதம் இல்லை ...
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
10-பிப்-202305:30:25 IST Report Abuse
Kasimani Baskaranஅதானி தனியார் நிறுவனம் என்று சொல்லுமளவுக்கு அறிவாளிகள் இருக்கும் வரை காங்கிரசால் எந்த வித பொய்யைக்கூட சொல்ல முடியும். பப்ளிக் லிமிட்டட் கம்பெனி என்றால் என்ன என்பதை தெரிந்து கொண்டு கறுத்து போடவும்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X