திரிபுரா சட்டசபை தேர்தல்: பா.ஜ., தேர்தல் அறிக்கை வெளியீடு

Updated : பிப் 09, 2023 | Added : பிப் 09, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
அகர்தலா: திரிபுரா மாநில சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ., தேர்தல் அறிக்கையை இன்று(பிப்.,09) பா.ஜ., தேசிய தலைவர் நட்டா வெளியிட்டார்.திரிபுராவில், முதல்வர் மாணிக் சாஹா தலைமையிலான பா.ஜ., அரசின் பதவிக்காலம் மார்ச் 22ல் முடிவுக்கு வருகிறது. இங்கு 2018ல் நடந்த சட்டசபை தேர்தலில், 59 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. மொத்தம், 51 தொகுதிகளில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

அகர்தலா: திரிபுரா மாநில சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ., தேர்தல் அறிக்கையை இன்று(பிப்.,09) பா.ஜ., தேசிய தலைவர் நட்டா வெளியிட்டார்.




latest tamil news


திரிபுராவில், முதல்வர் மாணிக் சாஹா தலைமையிலான பா.ஜ., அரசின் பதவிக்காலம் மார்ச் 22ல் முடிவுக்கு வருகிறது. இங்கு 2018ல் நடந்த சட்டசபை தேர்தலில், 59 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. மொத்தம், 51 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ., 36 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது.


சட்டசபை தேர்தல், வரும் பிப்.,16ல் நடக்கிறது. தேர்தல் முடிவு மார்ச் 2ல் வெளியாகிறது. 60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டசபை தேர்தல் வேட்பாளர்களை பா.ஜ., கடந்த ஜன.,28ம் தேதி அறிவித்தது. இந்நிலையில் திரிபுரா தேர்தல் அறிக்கையை பா.ஜ., தேசிய தலைவர் நட்டா இன்று(பிப்.,09) வெளியிட்டார்.



பின்னர் நட்டா பேசியதாவது:

பா.ஜ., வெளியிடும் தேர்தல் அறிக்கை வெறும் காகிதம் மட்டும் அல்ல. அது மக்களுக்கான அர்ப்பணிப்பு ஆகும். திரிபுராவில் முந்தைய காலக்கட்டத்தில் பிரச்னைகள் நிறைந்து காணப்பட்டன. ஆனால் பா.ஜ., ஆட்சியின் போது அமைதியாகவும், வளர்ச்சி அடைந்தும் காணப்பட்டது.


திரிபுராவில் 13 லட்சம் ' ஆயுஷ்மான்' பாரத் ஹெல்த் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை ரூ.107 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. நாங்கள் சொல்வதை நிறைவேற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.



latest tamil news


சாமி தரிசனம்:

திரிபுரா மாநிலம் உதய்பூரில் உள்ள மாதா சுந்தரி அம்மன் கோயிலில் நட்டா சாமி தரிசனம் மேற்கொண்டார். பின் அவர் கூறுகையில், இன்று எனக்கு மாதா சுந்தரி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. இங்கு வரும் போது எல்லாம் எனக்கு புதிய ஆற்றல் கிடைக்கும். மோடி தலைமையிலான பா.ஜ.,அரசு சிறப்பாக செயல்படுகிறது எனக் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
10-பிப்-202305:15:33 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ரூ.107 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது .
Rate this:
Cancel
09-பிப்-202317:58:20 IST Report Abuse
அப்புசாமி என்ன செய்யப்போறீங்கன்னு சொல்கவே இல்லியே?
Rate this:
Narayanan Muthu - chennai,இந்தியா
09-பிப்-202318:53:57 IST Report Abuse
Narayanan Muthuஎப்பவும் போலத்தான் பொது மக்களுக்கும் ஏழை ஏலியர்களுக்கும் பட்டை நாமம்...
Rate this:
Sathyasekaren Sathyanarayanana - Kulithalai ,இந்தியா
09-பிப்-202320:58:52 IST Report Abuse
Sathyasekaren Sathyanarayananaஅய்யாவுக்கு கான் காங்கிரஸ் போல ஊழல் செஞ்சு சொத்து சேர்க்கணும், அப்பதான் இவருக்கு சந்தோசம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X