புதுடில்லி: தேசிய பங்குச்சந்தை (என்.எஸ்.இ) நிர்வாக இயக்குனராக சித்ரா ராமகிருஷ்ணா கடந்த 2013 முதல் 2016 வரை பதவி வகித்தபோது அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ‛செபி' எனப்படும் பங்குச்சந்ததை கட்டுப்பாட்டு அமைப்பு குற்றம் சாட்டியது.
முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை தனக்கு ஆலோசகராக நியமித்து பல்வேறு சலுகைகளை வழங்கியதாக புகார்கள் எழுந்தன. இந்த வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் ஆனந்த் சுப்பிரமணியன் கடந்த ஆண்டு பிப்ரவரி இறுதியிலும், சித்ரா ராமகிருஷ்ணனை மார்ச்சிலும் சிபிஐ கைது செய்து சிறையில் அடைத்தது. டில்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், இன்று (பிப்.,9) சித்ரா ராமகிருஷ்ணன் மற்றும் ஆனந்த் சுப்பிரமணியன் ஆகிய இருவருக்கும் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
Advertisement