வடமாநில தொழிலாளர்களால் வேலை பறிபோகிறது: அதிராம்பட்டினம் கட்டுமான தொழிலாளர் மறியல் போராட்டம்

Added : பிப் 09, 2023 | கருத்துகள் (25) | |
Advertisement
தஞ்சாவூர்: அதிராம்பட்டினம் பகுதியில், வட மாநில தொழிலாளர்கள் அதிகளவு வருகையால், தமிழக தொழிலாளர்களுக்கு வேலை பறிபோவதாகக் கூறி, நுாற்றுக்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கட்டுமானம், தொழில் நிறுவனங்களில் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில்
வடமாநில தொழிலாளர்களால் வேலை பறிபோகிறது: அதிராம்பட்டினம் கட்டுமான தொழிலாளர் மறியல் போராட்டம்

தஞ்சாவூர்: அதிராம்பட்டினம் பகுதியில், வட மாநில தொழிலாளர்கள் அதிகளவு வருகையால், தமிழக தொழிலாளர்களுக்கு வேலை பறிபோவதாகக் கூறி, நுாற்றுக்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


தமிழகம் முழுவதும் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கட்டுமானம், தொழில் நிறுவனங்களில் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் கட்டுமான பணிகளை தாண்டி விவசாய பணிகளிலும் அதிகளவில் வேலை பார்த்து வருகின்றனர். இதனால், தமிழக தொழிலாளர்களுக்கு வேலை பறிபோவதாகக் கூறி, அவ்வப்போது போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில், வட மாநில தொழிலாளர்களுக்கு, அனைத்து கட்டிட வேலைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதால், தமிழக கட்டிடத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட கட்டிடத் தொழிலாளிகள், சேர்மன்வாடி பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த அதிராம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி மறியலில் ஈடுபட்ட தொழிலாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அதிராம்பட்டினம்- பட்டுக்கோட்டை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்துக்குப் பாதிக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (25)

g.s,rajan - chennai ,இந்தியா
10-பிப்-202311:46:52 IST Report Abuse
g.s,rajan அப்போ ஒவ்வொருவரும் இனி நாடு விட்டு நாடு செல்வதற்கு விசா கொடுப்பது போல மாநிலம் விட்டு மாநிலம் செல்ல அரசாங்கம் அனுமதி தர வேண்டுமா ???
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
10-பிப்-202311:18:31 IST Report Abuse
g.s,rajan குடிச்சாத் தான் வேலையே ஓடும் நம்ம ஆட்களுக்கு .இல்லை வேலை செய்வதே குடிக்கத்தான் என்ற அபாயகரமான போக்கும் நிலவுகிறது....
Rate this:
Cancel
THOMAS LEO - TRICHY,இந்தியா
10-பிப்-202306:35:23 IST Report Abuse
THOMAS LEO கூலி அதிகம். 9.30 மணிக்கு வருவது காலை சாப்பாடு , அப்புறம் 10.30 மணிக்கு வேலை தொடங்குவது, 11.30 டீ, வடை, 1.30 சாப்பாடு, மதியம் 3 மணிக கு வேலை தொடங்குவது, 5 மணிக்கு டீ, வடை. 5 மணிக்கு சட்டி கழுவி வேலை முடிக்க வேண்டியது. 6.30 மணிக்கு வேலை பார்த்தால் 1/2 day over time. அதனால் தான் வடக்கன் ஆதிக்கம். திருந்துங்க மக்களே. கொத்தனார் ₹1000,ரொம்ப ஓவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X