காந்திபுரம் கிராஸ்கட் ரோடு பவர் ஹவுஸ் எதிரில், உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், இன்று காலை, 10:00 முதல் 4:00 மணி வரை, 'நம்ம ஊரு சந்தை' கூடுகிறது.
மாதம் ஒரு முறை கூடும் இந்த சந்தையில், பாரம்பரிய உணவு பொருட்கள், இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி வகைகள், சிறுதானியங்கள், மரச்செக்கு எண்ணெய்கள், நாட்டுச் சர்க்கரை, பனங்கருப்பட்டி, கற்கண்டு, குழம்பு பொடி வகைகள், மளிகைப் பொருட்கள் காய்கறி, கீரைகள், பழங்கள், நாட்டுக்கோழி மற்றும் வாத்து முட்டைகள், குழந்தைகளுக்கான உணவு, பாரம்பரிய இனிப்பு, கார வகைகள், மூலிகை தேநீர் பொடி மற்றும் ஊறுகாய் வகைகள், வீட்டு வைத்திய மூலிகைப் பொடி வகைகள் என, ஏராளமான பொருட்களை வாங்கலாம்.
மண்பாண்டப்பொருட்கள், மூங்கில் பொருட்கள், பனை ஓலைப் பொருட்கள், சாப்பிட மதிய உணவு, அருந்த கனிச்சாறு, நீரா பானம் என இன்னும் ஏராளமான, இயற்கைக்கு நெருக்கமான அனைத்து பொருட்களும் வாங்கலாம்.