பா.ம.க., பிரமுகரை கொலை செய்த தி.மு.க., பிரமுகர் கைது

Added : பிப் 12, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
வேலுார்: வேலுார் அருகே, பா.ம.க., பிரமுகரை கொலை செய்த தி.மு.க., பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.வேலுார் அருகே சித்தேரியை சேர்ந்தவர் பிரகாஷ், 26. கட்டட மேஸ்திரி. இவர் பா.ம.க., வில் வேலுார் மண்டல செயலாளராக இருந்தார். பெரியார் நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 45. இவர் அங்கு டிஜிட்டல் போர்டு கடை வைத்துள்ளார். இவர் அரியூர் தி.மு.க., கிளை செயலாளாக இருக்கிறார்.ஆறு மாதங்களுக்கு முன்பு
பா.ம.க., பிரமுகரை கொலை செய்த தி.மு.க., பிரமுகர் கைது

வேலுார்: வேலுார் அருகே, பா.ம.க., பிரமுகரை கொலை செய்த தி.மு.க., பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

வேலுார் அருகே சித்தேரியை சேர்ந்தவர் பிரகாஷ், 26. கட்டட மேஸ்திரி. இவர் பா.ம.க., வில் வேலுார் மண்டல செயலாளராக இருந்தார். பெரியார் நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 45. இவர் அங்கு டிஜிட்டல் போர்டு கடை வைத்துள்ளார். இவர் அரியூர் தி.மு.க., கிளை செயலாளாக இருக்கிறார்.


ஆறு மாதங்களுக்கு முன்பு சித்தேரியில் நடந்த கோவில் திருவிழாவில் அன்னதானம் வழங்கும்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதமாக மாறியது. இந்நிலையில், நேற்று (பிப்.,11) இரவு தொரப்பாடியிலிருந்து சித்தேரிக்கு பைக்கில் பிரகாஷ் சென்று கொண்டிருந்தார்.


அப்போது பெரியார்நகர் கடையிலிருந்த ராமகிருஷ்ணன் சாலையை கடக்க முயன்றார். பைக்கில் சென்ற பிரகாஷ் அவர் மீது மோதினார். ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன் கட்டையால் தாக்கியதில், சம்பவம் நடந்த இடத்திலேயே பிரகாஷ் இறந்தார்.

பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


வேலுார் மாவட்ட எஸ்.பி., ராஜேஷ் கண்ணன் உத்தரவுபடி கொலையாளிளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், இறையன் காடு பகுதியில் பதுங்கியிருந்த ராமகிருஷ்ணனை போலீசார் இன்று(பிப்.,12) கைது செய்து வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (5)

கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
13-பிப்-202316:04:50 IST Report Abuse
கல்யாணராமன் சு. மண்டல செயலாளர், கிளை செயலாளர் எல்லாம் "பிரமுகர்கள்" ஆகிட்டாங்க இதுக்குதான் கட்சிகளிலே, எந்த பதவியாயிருந்தாலும் வெட்டு குத்து நடக்குதா
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
12-பிப்-202322:12:56 IST Report Abuse
Ramesh Sargam கொலை செய்த தி.மு.க., பிரமுகருக்கு போலீஸ் தண்டனை பெற்றுத்தருமா? இல்லை அவன் ஆளும் கட்சியை சேர்ந்தவன் என்பதால், அவன் மீது வழக்கே பதிவு செய்யாமல் அப்படியே அவனை விட்டு விடுவார்களா? அநேகமாக நான் இரண்டாவது கூறியதுதான் நடக்கும்.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
12-பிப்-202321:29:47 IST Report Abuse
சீனி டீம்கான்ன கொலைகாரன்கள் தான். எனவே போலீசார் பாரபட்சம் காட்டாமல் தூக்கில் போட நடவடிக்கை எடுக்கவேண்டும். ரெண்டு பேருக்கும் குடும்பம் குழந்தைகுட்டி இருக்கும். அரசியல் வன்முறையில் எல்லாம் போச்சா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X