அர்ச்சகர் தட்டில் காணிக்கை போட தடை;  ராமேஸ்வரம் கோயிலுக்கு பக்தர்கள் எதிர்ப்பு
அர்ச்சகர் தட்டில் காணிக்கை போட தடை; ராமேஸ்வரம் கோயிலுக்கு பக்தர்கள் எதிர்ப்பு

அர்ச்சகர் தட்டில் காணிக்கை போட தடை; ராமேஸ்வரம் கோயிலுக்கு பக்தர்கள் எதிர்ப்பு

Updated : பிப் 14, 2023 | Added : பிப் 14, 2023 | கருத்துகள் (24) | |
Advertisement
ராமேஸ்வரம் :-அர்ச்சகர் தட்டில் காணிக்கை போடக் கூடாது, உண்டியலில் மட்டும் தான் போட வேண்டும் என ராமேஸ்வரம் கோயில் அதிகாரிகள் பக்தர்களை மிரட்டுவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு இந்தியா முழுவதிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர். தீபாராதனை காட்டும் அர்ச்சகர் தட்டில் காணிக்கை போடுவது அவர்களின் வழக்கம். தற்போது ஆரத்தி தட்டில்
Prohibition of offerings on the priests plate; Devotees protest against Rameswaram temple  அர்ச்சகர் தட்டில் காணிக்கை போட தடை;  ராமேஸ்வரம் கோயிலுக்கு பக்தர்கள் எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


ராமேஸ்வரம் :-அர்ச்சகர் தட்டில் காணிக்கை போடக் கூடாது, உண்டியலில் மட்டும் தான் போட வேண்டும் என ராமேஸ்வரம் கோயில் அதிகாரிகள் பக்தர்களை மிரட்டுவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு இந்தியா முழுவதிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர். தீபாராதனை காட்டும் அர்ச்சகர் தட்டில் காணிக்கை போடுவது அவர்களின் வழக்கம். தற்போது ஆரத்தி தட்டில் காணிக்கை போடாதீர்கள். உண்டியலில் மட்டுமே போட வேண்டும் என கோயில் அதிகாரிகள், ஊழியர்கள் சன்னதிகளில் நின்று பக்தர்களிடம் வற்புறுத்துகின்றனர்.




சுவாமிக்கு கொடுக்கும் காணிக்கை



எஸ்.சங்கரவாத்தியார்மாநில செயலாளர்தமிழ்நாடு பிராமணர் சங்கம்:

பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததும் முதலில் காணிக்கையை அர்ச்சகர் தட்டில் போடுவது வழக்கம். அவர்களுக்கு கொடுக்கும் காணிக்கையை சுவாமிக்கு கொடுப்பதாக எண்ணி மன திருப்தி அடைகின்றனர். தட்டில் உள்ள காணிக்கையை எடுத்து உண்டியலில் போட சொல்வது பக்தர்கள் திருப்தியை தட்டி பறிப்பது போல் உள்ளது.


வியாபாரி போல் கூவி அழைக்கிறார்கள்



வி.ராகவேந்திரன் சர்மா, ராமேஸ்வரம் புரோகிதர்கள் சங்க தலைவர்:

எந்த அர்ச்சகரும் பக்தர்களை கட்டாயப்படுத்தி காணிக்கை கேட்பதோ அல்லது உண்டியலில் போடுவதை தடுத்து நிறுத்துவதோ இல்லை. ஆனால் வரிசையில் நிற்கும் பக்தர்களிடம் 'காணிக்கையை உண்டியலில் போடுங்கள்...., போடுங்கள்....' என கூறுவது வாடிக்கையாளரை வியாபாரி கூவி கூவி அழைப்பது போல் உள்ளது.


latest tamil news



நீதிமன்றம் செல்வோம்



கே.ராமமூர்த்திமாவட்ட தலைவர், ஹிந்து முன்னணி, ராமநாதபுரம்:

தமிழக கோயில்களில் அர்ச்சர்கள் தட்டில் காணிக்கை போடக்கூடாது என எந்த உத்தரவும் இல்லை. ஆனால் ராமேஸ்வரம் கோயிலில் நடக்கும் அதிகாரிகளின் இந்த அடாவடி செயல் கண்டனத்திற்குரியது.ஆன்மிக மரபு, கலாசாரத்தை சீர்குலைக்குப்பதையே முக்கிய நோக்கமாக இந்த அரசு கொண்டுள்ளது. இந்த செயலை தடுக்க சட்டரீதியாக நீதிமன்றத்தில் முறையிடுவோம்.


செல்வந்தராக வாழவில்லை



ஏ.சரவணன்தென் மண்டல அமைப்பாளர் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத்:

தற்போது ராமேஸ்வரம் கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள், ஓய்வு பெற்ற அர்ச்சகர்கள் என யாரும் செல்வந்தராக வாழவில்லை. அர்ச்சகர்களுக்கு குறைந்த சம்பளமே அரசு தருகிறது. பக்தர்கள் கொடுக்கும் காணிக்கையே அவர்களின் குடும்ப தேவையை பூர்த்தி செய்கிறது. அர்ச்சகர்கள் தட்டில் போடும் காணிக்கையால் அரசுக்கு பெரிய இழப்பு ஏற்பட போவதில்லை. உண்டியல் வருவாயை பெருக்கி அரசிடம் நற்பெயர் வாங்க இங்குள்ள அதிகாரிகள் கங்கணம் கட்டி செயல்படுகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (24)

g.s,rajan - chennai ,இந்தியா
14-பிப்-202320:42:06 IST Report Abuse
g.s,rajan பகுத்தறிவுவாதிகள் இந்துக்களின் கோயில்களின் வசம் இருக்கும் கோடிக்கணக்கில் இருக்கும் கோயில் சொத்துக்களை ஆட்டையைப் போட்டு விட்டு இப்போது கோயில் உண்டியல் கை வைக்க அதன் வசூலில் குறி வைக்கிறாங்க,, கோயில்களில் உள்ள அர்ச்சகர்கள் தட்டில் காணிக்கை போடக்கூடாது என்று கூறும் முக்கியக் காரணம் இதுதான்.பணம் எங்கு போட வேண்டும் என்று தீர்மானிப்பது பக்தர்களின் விருப்பம் மேலும் அது ,அவர்களின் தனிப்பட்ட உரிமை ,அதில் யாரும் தலையிடத் தேவையில்லை.அவ்வாறு எவரேனும் தலையிட்டால் பக்தர்களும் தங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டும் .
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
14-பிப்-202316:57:23 IST Report Abuse
venugopal s இந்த செய்தி உண்மை என்றால் வன்மையாக கண்டிக்கத்தக்கது!
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
14-பிப்-202312:22:59 IST Report Abuse
தமிழ்வேள் மோடிஜியின் நடவடிக்கைகளால் , அல்லேலூயா கும்பலுக்கு மதமாற்றம் செய்ய கிடைத்துவரும் வெளிநாட்டு பணம் ஒட்டுமொத்தமாக நின்றுவிட்டது ...சில்லறை இன்றி திண்டாடுவதால், "மேற்படி " குஜால் செலவுகளுக்கு பணம் இன்றி தவிப்பதால், சுடாலின் காட்டியவழியில், அறநிலைய துறை பயணிக்கிறது ...கோவில் உண்டியல் பணம் பெரும்பாலும் செலவு என்ற பெயரில் ஆட்டை போடப்பட்டு திருட்டு சபைகளுக்கு அனுப்பப்படுகிறது ....வசூல் எதிர்ப்பார்த்தபடி நடக்கவில்லை ...ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி - அதற்கும் இளைத்தவன் ஹிந்து கோவில் அர்ச்சகர் -என்பதால் , நாத்திக போர்வையில் உலாவரும் திராவிட ஆபிரகாமிய திமுக அரசு , திருட்டு சபைகளுக்கு கோவில் பணத்தை பிடுங்கி கொடுக்கிறது .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X