லஞ்சம் யாருக்கு எவ்வளவு எங்கே? (3)
லஞ்சம் யாருக்கு எவ்வளவு எங்கே? (3)

சிறப்பு பகுதிகள்

லஞ்சம் யாருக்கு, எவ்வளவு, எங்கே?

லஞ்சம் யாருக்கு எவ்வளவு எங்கே? (3)

Added : பிப் 15, 2023 | |
Advertisement
லஞ்சப் பேர்வழிகளை அம்பலப்படுத்த, 'லஞ்சம் - என்னிடம் பறித்தனர்' பகுதி துவக்கப்பட்டுள்ளது. இப்பகுதி திங்கள்தோறும் 'தினமலர்' இதழில் வெளியாகும். வாசகரின் இந்த வார உள்ளக்குமுறல் இதோ:தனியார் பில்டிங்கில் தனி அரசாங்கம் பணம் கை மாறுனா, பட்டா கை மாறும்திருவள்ளூர் மாவட்டம் கோனூரில் இடம் வாங்கினேன். பத்திரப்பதிவெல்லாம் முடிந்தது. பட்டாவுக்காக ஆன்லைனில்
Bribery to whom and how much? (3)  லஞ்சம் யாருக்கு எவ்வளவு எங்கே? (3)

லஞ்சப் பேர்வழிகளை அம்பலப்படுத்த, 'லஞ்சம் - என்னிடம் பறித்தனர்' பகுதி துவக்கப்பட்டுள்ளது. இப்பகுதி திங்கள்தோறும் 'தினமலர்' இதழில் வெளியாகும். வாசகரின் இந்த வார உள்ளக்குமுறல் இதோ:


தனியார் பில்டிங்கில் தனி அரசாங்கம் பணம் கை மாறுனா, பட்டா கை மாறும்



திருவள்ளூர் மாவட்டம் கோனூரில் இடம் வாங்கினேன். பத்திரப்பதிவெல்லாம் முடிந்தது. பட்டாவுக்காக ஆன்லைனில் விண்ணப்பித்தேன். பொன்னேரி தாலுகா அலுவலகத்தில், நில அளவைத்துறைக்கு உரிய ஆவணங்களுடன் சென்று பட்டா குறித்து கேட்டால், யாரும் பதில் சொல்லவில்லை. யாரைக்கேட்டாலும் வி.ஏ.ஓ.,வை போய் பாருங்கள் என, ஒரு தனியார் பில்டிங்கை கை காட்டினார்கள். அந்த தனியார் பில்டிங்கில், வி.ஏ.ஓ.,வுக்கு என, தனியாக நிரந்தர அறை ஒன்றை ஒதுக்கியிருக்கின்றனர். அங்கு சென்று பார்த்ததும், நாளை ஆபீசுக்கு ஐந்தாயிரத்துடன் வந்து விடுங்கள் என்றார் வி.ஏ.ஓ.,
ஏற்கெனவே சொத்துமதிப்பு சான்றிதழுக்காக, பொன்னேரி தாலுகா அலுவலகத்தில் பட்டபாடும், அதன் நடைமுறையும் தெரியும். வயதாகி விட்டதால் ஒவ்வொரு முறையும் அலைய முடியாது என்பதால், வேறு வழியின்றி பணத்துடன், கோனுார் வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கு (இது அதிகாரப்பூர்வமான அலுவலகம்) சென்றேன்.
கையில் ரூ. 3,500ஐ கொடுத்ததும் எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டு, அனுப்பிவிட்டார். அடுத்த நாளே ஆன்லைனில் பட்டா அப்ரூவல் செய்யப்பட்டு விட்டது. அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பார்கள். இங்கோ, அரசாங்கத்துக்குப் போட்டியாக தனியாக ஒரு ராஜாங்கம் நடத்தி, பணமின்றி எதுவும் நடக்காது என இருக்கிறார்கள்.

தொடரும்...

இதோ தீர்வு

ஒரு சொத்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள்ளாக, தானியங்கி முறையில் உரியவரின் பெயருக்கு பட்டா மாற்றலாகி, அதை விண்ணப்பதாரர் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் 'ஆன்லைன்' முறையினை அமல்படுத்த வேண்டும். அந்த பட்டாவில் வேண்டுமானால், 'தற்காலிக பட்டா' என குறிப்பிட்டுவிட்டு, ஒருவேளை வில்லங்கம் எழுந்தால்... நிரந்தர பட்டா வழங்கிடும்போது நிவர்த்தி செய்துகொள்ளலாம். அரசு அதிகாரிகளை மக்கள் நேரடியாக சந்திக்க வேண்டுமென்ற கட்டாயத்தினை ஒழித்து, அனைத்து நடவடிக்கைகளையும் 'ஆன்லைன்' நடைமுறைக்கு மாற்றினாலே லஞ்சம் தானாக ஒழிந்துவிடும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

haridoss jennathan - VELLORE,இந்தியா
13-மே-202310:20:44 IST Report Abuse
haridoss jennathan அரசாங்கத்துக்குப் போட்டியாக தனியாக ஒரு ராஜாங்கம் நடத்தி, பணமின்றி எதுவும் நடக்காது என இருக்கிறார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X