பாக்., திவாலாகிவிட்டது: அமைச்சர் ஒப்புதல்
பாக்., திவாலாகிவிட்டது: அமைச்சர் ஒப்புதல்

பாக்., திவாலாகிவிட்டது: அமைச்சர் ஒப்புதல்

Updated : பிப் 19, 2023 | Added : பிப் 19, 2023 | கருத்துகள் (41) | |
Advertisement
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் திவால் ஆகி விட்டதாக கூறியுள்ள அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிப், மக்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால், சர்வதேச அமைப்புகளின் உதவியை நாடி உள்ளது. இதற்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்ற பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு
Pakistan minister confesses country has already gone bankrupt, asks people to stand on their feetபாக்., திவாலாகிவிட்டது: அமைச்சர் ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் திவால் ஆகி விட்டதாக கூறியுள்ள அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிப், மக்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.


பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால், சர்வதேச அமைப்புகளின் உதவியை நாடி உள்ளது. இதற்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்ற பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பால் விலை ரூ.250க்கு விற்பனையாகிறது.


இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் க்வாஜா ஆசிப் கூறுகையில், நாம் திவாலான நாட்டில் வசித்து வருகிறோம். பாகிஸ்தான் கடனை திருப்ப செலுத்த முடியாமல் தவிப்பதாகவும், பொருளாதார சரிவு ஏற்பட்டு வருவதாக கூறுகின்றனர். ஆனால், அவை ஏற்கனவே நடந்துவிட்டது. மக்கள் அனைவரும் சொந்த காலில் நிற்க வேண்டும்.



latest tamil news


பாகிஸ்தான் திவாலாகிவிட்டது. இந்த பிரச்னைக்கான தீர்வு பாகிஸ்தானில் உள்ளது. ஆனால், நாம் ஐஎம்எப் அமைப்பிடம் உதவி கேட்டு எதிர்பார்த்து நிற்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.


அமைச்சரின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகியதை தொடர்ந்து, அந்நாட்டு அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (41)

20-பிப்-202311:07:07 IST Report Abuse
ராமகிருஷ்ணன் பாகிஸ்தான் அகதிகளை இந்தியா அனுமதிக்க கூடாது. அனுமதிப்பது தன் தலையில் தானே தீ வைத்து கொள்வது போன்றது, இரக்கம், கருணை மனிதாபிமானம் இவர்கள் விஷயத்தில் பார்க்கவே கூடாது.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
20-பிப்-202303:26:05 IST Report Abuse
NicoleThomson அவர்கள் ஊரின் பெண்களை எப்போது ஏற்றுமதி பண்ணினார்களோ அப்பவே அவர்கள் திவால் நிலையை அடைந்து விட்டனர்
Rate this:
Cancel
kumar c - bangalore,இந்தியா
19-பிப்-202322:24:35 IST Report Abuse
kumar c முதல்ல தீவிரவாதம் ஏற்றுமதி.இனி அபின் ஏற்றுமதி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X