2700 டன் ரேஷன் அரிசி ரயிலில் வருகை

Added : பிப் 19, 2023 | |
Advertisement
விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்ட பொது விநியோகத்திற்காக தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 2,700 டன் அரிசி ரயிலில் வந்தது.தமிழக அரசு பொது விநியோகத்திற்காக இந்திய உணவுக் கழகத்திடம் அரிசியை கொள்முதல் செய்கிறது. மாவட்ட பொது விநியோகத்திற்காக தெலுங்கானா மாநிலம், பெத்த பள்ளி தாலுகா, கரீம் நகர் பகுதியில் இருந்து நேற்று 2,700 டன் அரிசி ரயில் மூலம் முண்டியம்பாக்கம் வந்து
 2700 டன் ரேஷன் அரிசி ரயிலில் வருகை



விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்ட பொது விநியோகத்திற்காக தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 2,700 டன் அரிசி ரயிலில் வந்தது.

தமிழக அரசு பொது விநியோகத்திற்காக இந்திய உணவுக் கழகத்திடம் அரிசியை கொள்முதல் செய்கிறது.

மாவட்ட பொது விநியோகத்திற்காக தெலுங்கானா மாநிலம், பெத்த பள்ளி தாலுகா, கரீம் நகர் பகுதியில் இருந்து நேற்று 2,700 டன் அரிசி ரயில் மூலம் முண்டியம்பாக்கம் வந்து சேர்ந்தது.

இந்திய உணவு கழக குடோன் மேலாளர் சதாம் உசேன் மேற்பார்வையில் ரயிலில் வந்த 54 ஆயிரத்து 550 அரிசி மூட்டைகளை ரயில்வே கூட்ஸ் ெஷட் தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி குண்டலபுலியூரில் உள்ள இந்திய உணவுக் கழக குடோனுக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மாவட்டத்தின் தேவைக்கேற்ப அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X