துருக்கி சிரியா எல்லையில் மீண்டும் சக்திவாய்ந்த பூகம்பம்:3 பேர் பலி

Updated : பிப் 21, 2023 | Added : பிப் 20, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
அங்காரா: துருக்கி , சிரியா எல்லைப்பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் துருக்கியில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். டெப்னி என்ற நகரை மையமாக வைத்து உருவான இந்த பூகம்பத்தில் ஏராளமான கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மேற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில், கடந்த 6ம் தேதி
துருக்கி, சிரியா, எல்லை,  பூகம்பம்

அங்காரா: துருக்கி , சிரியா எல்லைப்பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் துருக்கியில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். டெப்னி என்ற நகரை மையமாக வைத்து உருவான இந்த பூகம்பத்தில் ஏராளமான கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


மேற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில், கடந்த 6ம் தேதி அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 46 ஆயிரத்தை தாண்டியுள்ளது.நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளால், 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட கட்டடங்கள் தரைமட்டமாகின. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடிபாடுகளில் சிக்கி உள்ளோரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.


latest tamil news


மீட்பு பணியின் போது மேலும் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. சிலர் கட்டட இடிபாடுகளில் உயிருடன் மீட்கப்பட்டனர்.


இந்நிலையில் இன்று மீண்டும் துருக்கி, சிரியா எல்லைப்பகுதியில் பூமிக்கு அடியில் 1.2 கி.மீ. ஆழத்தில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய பூகம்பக ஆய்வில் மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

Ravi - Tamilnadu,இந்தியா
22-பிப்-202310:20:38 IST Report Abuse
Ravi Manitha neyam venum...sir... .
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
21-பிப்-202307:14:55 IST Report Abuse
jayvee இது போல ஒரு மிகப்பெரிய நில நடுக்கம், பாகிஸ்தான், சீன மற்றும் ஆப்கான் நாடுகளில் நடக்க இறைவனை (அவர்தான்) வேண்டிக்கொள்கிறேன் ..
Rate this:
V. SRINIVASAN - Chennai -,இந்தியா
21-பிப்-202312:04:29 IST Report Abuse
V. SRINIVASANவேண்டாம் சார் அந்த எண்ணம் அங்கேயும் குழந்தைகள், வயதான பெரியவர்கள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பலர் இருப்பார்கள் எல்லாரும் எங்கே இருந்தாலும் நன்றாக இருக்க பிரார்த்தனை செய்ய வேண்டும் அல்லது வேற மாதிரி யோசிக்க வேண்டாம் சார்....
Rate this:
Cancel
21-பிப்-202300:13:42 IST Report Abuse
Vishnu Kumar கடவுலே போதும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X