கரூர்: அமராவதி ஆற்றில், கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து நின்றது. இதனால், தடுப்பணை பகுதியில் பாறை கற்கள் வெளியே தெரிகின்றன.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. ஆனால், குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு, 330 கன அடியும், புதிய பாசன வாய்க்காலில், 440 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.
மேலும், கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு வந்த, தண்ணீர் வரத்து நின்றது. இதனால், தடுப்பணை பகுதிகளில் பாறைகள் வெளியே தெரிகின்றன. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 61.45 அடியாக இருந்தது.
காவிரி ஆற்றில், மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் காலை, வினாடிக்கு, 1,907 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 2,588 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுதும், காவிரியாற்றில் திறக்கப்
பட்டது.
க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து நின்றது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 15.18 அடியாக இருந்தது. இதனால், நொய்யல் பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.