'ரூட் தல' யாரு என போட்டி மாணவர்களிடையே மோதல்

Added : பிப் 23, 2023 | |
Advertisement
பொன்னேரி :சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயில், பொன்னேரிக்கு, நேற்று மாலை 4:00 மணிக்கு வந்தது.பயணியர் ஏறி, இறங்கிதும் புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களில், பெரியகாவணம் கேட் அருகே நின்றது.அந்த ரயிலில் பயணித்த இரு கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையே, 'ரூட் தல' யாரு என்பதில் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.பீதியடைந்த



பொன்னேரி :சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயில், பொன்னேரிக்கு, நேற்று மாலை 4:00 மணிக்கு வந்தது.

பயணியர் ஏறி, இறங்கிதும் புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களில், பெரியகாவணம் கேட் அருகே நின்றது.

அந்த ரயிலில் பயணித்த இரு கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையே, 'ரூட் தல' யாரு என்பதில் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

பீதியடைந்த பயணியர், ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து நிறுத்தினர். மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் ரயிலில் இறங்கி தப்பினர். சிறிது நேரத்திற்கு பின், ரயில் இயக்கப்பட்டது.

இந்த மோதலில், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த சென்னை மாநில கல்லுாரி மாணவர் ராஜ்குமார், 20, காயம் அடைந்தார்.

அவர், பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X