பரமக்குடி--பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் அங்காள பரமேஸ்வரி குருநாத சுவாமி மற்றும் 21 பரிவார தெய்வங்களின் மாசி மகா சிவராத்திரி பால் குட விழா நடந்தது.
இக்கோயிலில் பிப்.16 இரவு 11:00 மணிக்கு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரிக்குகாப்பு கட்டி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
பிப்.18 இரவு 11:00 மணிக்கு மாசி சிவராத்திரி நாளில் வைகை ஆற்றில் இருந்து சங்கிலி சப்பானி தெய்வங்களின் அருளோடு அங்காள பரமேஸ்வரி கரகம் முக்கிய வீதிகளில் வலம் வந்தது.
தொடர்ந்து பிப்.22ல் அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வந்தார். நேற்று காலை 9:00 மணிக்கு வைகை ஆற்றில் பால் குடங்கள்கட்டப்பட்டு 11:00 மணிக்கு வேல் குத்தி, பால் குடங்களை சுமந்து பக்தர்கள் கோயிலை அடைந்தனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவடைந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.