மீடியனில் கார் மோதி முதியவர் பரிதாப பலி

Added : பிப் 24, 2023 | |
Advertisement
துரைப்பாக்கம், சென்னை, தரமணி, காந்தி சாலையைச் சேர்ந்தவர் கோதண்டம், 70. இவரது மனைவி பொன்னம்மாள், 65. இவர்களது மகன்கள் சிவசங்கர், வினித் மற்றும் கோதண்டத்தின் தங்கை ஆகியோருடன், திருத்துறைப்பூண்டிக்கு காரில் சென்றனர்.அங்கு, வினித்திற்கு பெண் பார்த்துவிட்டு நேற்று அதிகாலை, ராஜிவ் காந்தி சாலை வழியாக சென்னைக்கு திரும்பினர். பெருங்குடி, சுங்கச்சாவடி அருகே எதிர்பாராதவிதமாக



துரைப்பாக்கம், சென்னை, தரமணி, காந்தி சாலையைச் சேர்ந்தவர் கோதண்டம், 70. இவரது மனைவி பொன்னம்மாள், 65. இவர்களது மகன்கள் சிவசங்கர், வினித் மற்றும் கோதண்டத்தின் தங்கை ஆகியோருடன், திருத்துறைப்பூண்டிக்கு காரில் சென்றனர்.

அங்கு, வினித்திற்கு பெண் பார்த்துவிட்டு நேற்று அதிகாலை, ராஜிவ் காந்தி சாலை வழியாக சென்னைக்கு திரும்பினர். பெருங்குடி, சுங்கச்சாவடி அருகே எதிர்பாராதவிதமாக மீடியனில் மோதி கார் தலைகுப்புற கவிழ்ந்தது.

அங்கிருந்தோர் ஓடி வந்து, காரில் இருந்த அனைவரையும் மீட்டனர். மயங்கிய நிலையில் இருந்த கோதண்டத்தை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு, மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது. மற்ற நான்கு பேர், லேசான காயமடைந்தனர். கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X