ஜெயலலிதா போல வேறு யாருமே இல்லை: ரஜினி
ஜெயலலிதா போல வேறு யாருமே இல்லை: ரஜினி

ஜெயலலிதா போல வேறு யாருமே இல்லை: ரஜினி

Updated : பிப் 25, 2023 | Added : பிப் 25, 2023 | கருத்துகள் (26) | |
Advertisement
சென்னை: 'ஜெயலலிதா போல, இன்னொரு பெண்மணியை யாரும் பார்க்க முடியாது' என, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 75வது பிறந்த நாளை முன்னிட்டு, நடிகர் ரஜினி பேசிய 'வீடியோ' பதிவு வெளியாகியுள்ளது.அதில் அவர் கூறியுள்ளதாவது:ஜெயலலிதாவின், 75வது பிறந்த நாளில், அவர் நம்மிடையே இல்லை என்ற வருத்தத்தோடு, அவரை நினைவுப்படுத்தி கொள்கிறேன்.

சென்னை: 'ஜெயலலிதா போல, இன்னொரு பெண்மணியை யாரும் பார்க்க முடியாது' என, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார்.



latest tamil news


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 75வது பிறந்த நாளை முன்னிட்டு, நடிகர் ரஜினி பேசிய 'வீடியோ' பதிவு வெளியாகியுள்ளது.


அதில் அவர் கூறியுள்ளதாவது:


ஜெயலலிதாவின், 75வது பிறந்த நாளில், அவர் நம்மிடையே இல்லை என்ற வருத்தத்தோடு, அவரை நினைவுப்படுத்தி கொள்கிறேன். ஜெயலலிதா போல இன்னொரு பெண்மணியை பார்க்க முடியாது. காரணம், அவரது அழகு, கம்பீரம், அறிவு, துணிச்சல், ஆளுமை.


எம்.ஜி.ஆருக்கு, 'புரட்சித் தலைவர்' என்ற பெயர் வந்ததற்கான காரணம் அனைவருக்கும் தெரியும். நடிகராக இருந்து, மாநிலத்தில் கட்சி ஆரம்பித்து, ஆட்சியை பிடித்து, முதல்வரானார். மிகப்பெரிய புரட்சி செய்து, புரட்சித் தலைவரானார்.


அவரது மறைவுக்கு பின், அ.தி.மு.க., பிளவுபட்ட போது, பெரிய தலைவர்கள், அனுபவசாலிகள் பலர் இருந்த நிலையிலும், தனி பெண்மணியாக பிளவுபட்ட கட்சியை ஒன்றாக்கி, அதை இன்னும் பலப்படுத்தி, பெரிய கட்சியாக்கி, பல ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டவர் ஜெயலலிதா.


latest tamil news


இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களும், ஜெயலலிதாவை மதித்தனர்; அவரின் திறமையை பார்த்து வியந்தனர். ஒரு காலகட்டத்தில், எனக்கும், அவருக்கும் ஒரு மனஸ்தாபம். அவருக்கு எதிராக, நான் பேச வேண்டிய சூழல்ஏற்பட்டது.


அதன்பின், என் மகள் திருமணத்திற்கு அவரை அழைக்க போய், பழையதை மறந்து, என் மகள் திருமணத்தை நடத்திக் கொடுத்தார். பெரிய கருணை உள்ளம் கொண்டவர். அவரது நாமம் வாழ்க; நன்றி. இவ்வாறு ரஜினி பேசியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (26)

25-பிப்-202320:40:57 IST Report Abuse
முருகன் இவர் ஒரே நிலைப்பாட்டில் என்றும் இருந்தாது இல்லை. இவரின் ரசிகர்கள் நிலை தான் பரிதாபம்.
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம் ஒருத்தர் மாதிரியே 7 பேர் இருப்பாங்கன்னு சொல்றாங்களே அப்போ மீதி 6 பேர் எங்கே? என்ன பண்றாங்க
Rate this:
Raa - Chennai,இந்தியா
28-பிப்-202315:18:58 IST Report Abuse
Raaivarea...
Rate this:
Raa - Chennai,இந்தியா
28-பிப்-202315:20:16 IST Report Abuse
Raaஇவரே இவர் படமான அதிசிய பிறவியில் சொல்லி இருப்பார். ஒரே மாதிரி உலகத்தில் ஏழு பேர் இருப்பார்கள் என்று...
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
25-பிப்-202313:12:12 IST Report Abuse
Natarajan Ramanathan கட்சிக்கு உயிர் கொடுத்த மன்னிக்க முடியாத மாபெரும் தவறை செய்து விட்டீர்கள். அதனால்தான் உங்கள் குடும்பம் நிம்மதி இழந்துவிட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X