ஒவ்வொரு ஆண்டும் வீட்டு மனை அமைச்சர் சோமண்ணா உத்தரவாதம்

Added : பிப் 25, 2023 | |
Advertisement
சாம்ராஜ் நகர்-''பா.ஜ.,வை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால், ஒவ்வொரு ஆண்டும் வீட்டு மனை ஒதுக்கப்படும்,'' என வீட்டு வசதி துறை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்.சாம்ராஜ் நகர் மாவட்டம் குண்டுலுபேட்டில் நேற்று பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில் அமைச்சர் சோமண்ணா பேசியதாவது:குண்டுலுபேட்டில் 30 ஆண்டுகளாக யாருக்கும் நிலம் ஒதுக்கப்பட வில்லை.
 ஒவ்வொரு ஆண்டும் வீட்டு மனை அமைச்சர் சோமண்ணா உத்தரவாதம்



சாம்ராஜ் நகர்-''பா.ஜ.,வை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால், ஒவ்வொரு ஆண்டும் வீட்டு மனை ஒதுக்கப்படும்,'' என வீட்டு வசதி துறை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்.

சாம்ராஜ் நகர் மாவட்டம் குண்டுலுபேட்டில் நேற்று பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் அமைச்சர் சோமண்ணா பேசியதாவது:

குண்டுலுபேட்டில் 30 ஆண்டுகளாக யாருக்கும் நிலம் ஒதுக்கப்பட வில்லை. வறுமைக்கு ஜாதி, குலம், கட்சி கிடையாது. தகுதி உடைய அனைத்து ஏழை மக்களுக்கும் நிலம் வழங்க அரசு தயாராக உள்ளது.

பெங்களூரில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட பிரதமர் மோடி 600 கோடி ரூபாய் கொடுத்திருந்தார். அதற்கு தேவையான இடத்தை வழங்க, அப்போதைய அரசு கண்டுகொள்ளவில்லை.

நான் அமைச்சரான பின், பெங்களூரில் நிலம் அடையாளம் காணப்பட்டு, 52 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டன. ஏற்கனவே, 5,000 பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கியுள்ளோம்.

பா.ஜ.,வை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால், ஒவ்வொரு ஆண்டும் வீட்டு மனை ஒதுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X