கல்லூரி மாணவி பலி; உறவினர்கள் மறியல்

Added : பிப் 27, 2023 | |
Advertisement
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தனியார் நர்சிங் கல்லுாரி மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி கார்த்திகாஜோதி 19, நேற்று தனியார் மருத்துவமனையில் இறந்தார். தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.ஒட்டன்சத்திரம் அருகே செம்மடைப்பட்டியில் தனியார் நர்சிங் கல்லூரி உள்ளது. பழையபட்டி மாணவி
 கல்லூரி மாணவி பலி; உறவினர்கள் மறியல்

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தனியார் நர்சிங் கல்லுாரி மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி கார்த்திகாஜோதி 19, நேற்று தனியார் மருத்துவமனையில் இறந்தார். தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

ஒட்டன்சத்திரம் அருகே செம்மடைப்பட்டியில் தனியார் நர்சிங் கல்லூரி உள்ளது. பழையபட்டி மாணவி கார்த்திகாஜோதி 19, கல்லுாரி விடுதியில் தங்கி பி.எஸ்.சி., நர்சிங் முதலாமாண்டு படித்தார். அவருடன் 3 மாணவிகள் தங்கினர். பிப்., 21 காலை 9:00 மணிக்கு கல்லுாரி 3வது மாடியிலிருந்து குதித்து கார்த்திகாஜோதி தற்கொலைக்கு முயன்றார்.

ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று காலை இறந்தார். அவரது உடல் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதையறிந்த மாணவி உறவினர்கள் மாணவி முகத்தை கூட காட்டாமல் திண்டுக்கல் கொண்டு சென்று விட்டதாகவும், தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறியும் ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் உறவினர்களை திண்டுக்கல் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X