திருமண விருந்து சாப்பிட்ட 43 பேருக்கு வாந்தி, மயக்கம்

Added : பிப் 27, 2023 | |
Advertisement
கர்கோன் : மத்திய பிரதேசத்தில் திருமண விருந்து சாப்பிட்ட, 43 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மத்திய பிரதேசத்தில் உள்ள கர்கோன் மாவட்டத்தின் ஹவுசிங் போர்டு காலனியில் நேற்று முன்தினம் இரவு திருமண நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் உணவருந்திய பின், பழச்சாறு அருந்தியுள்ளனர். இவர்களில் 43 பேர்

கர்கோன் : மத்திய பிரதேசத்தில் திருமண விருந்து சாப்பிட்ட, 43 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மத்திய பிரதேசத்தில் உள்ள கர்கோன் மாவட்டத்தின் ஹவுசிங் போர்டு காலனியில் நேற்று முன்தினம் இரவு திருமண நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் உணவருந்திய பின், பழச்சாறு அருந்தியுள்ளனர். இவர்களில் 43 பேர் வாந்தி எடுத்து, மயங்கி விழுந்தனர். இதையடுத்து அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சிகிச்சை பெற்ற பெரும்பாலானவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், முதற்கட்ட சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் சாப்பிட்ட உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்விற்கு அனுப்பியுள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X