நிர்வாகத் திறனற்ற திமுக அரசு: பழனிசாமி கண்டனம்

Updated : பிப் 27, 2023 | Added : பிப் 27, 2023 | கருத்துகள் (10) | |
Advertisement
சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு போன்ற முக்கிய தேர்வுகளையே முறையாக கையாளத் தெரியாத நிர்வாகத் திறனற்ற திமுக அரசை வன்மையாக கண்டிப்பதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.தமிழகம் முழுவதும் கடந்த பிப்.,25ல் டி.என்.பி.எஸ்.சி 'குரூப்-2' பிரதான தேர்வு நடைபெற்றது. இதில் காலையில் நடந்த தமிழ் தகுதித்தாள் தேர்வுக்கு, பல தேர்வு மையங்களில் விடைத்தாள்கள் வர
TNPSC, Group2 Main Exam, Edappadi Palanisamy, அதிமுக, எடப்பாடி பழனிசாமி, பழனிசாமி, டிஎன்பிஎஸ்சி, குரூப்2தேர்வு, திமுக, தமிழக அரசு, திமுக அரசு, ADMK, EPS, AIADMK, DMK, Tamilnadu Govt, TNGovt,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு போன்ற முக்கிய தேர்வுகளையே முறையாக கையாளத் தெரியாத நிர்வாகத் திறனற்ற திமுக அரசை வன்மையாக கண்டிப்பதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.



தமிழகம் முழுவதும் கடந்த பிப்.,25ல் டி.என்.பி.எஸ்.சி 'குரூப்-2' பிரதான தேர்வு நடைபெற்றது. இதில் காலையில் நடந்த தமிழ் தகுதித்தாள் தேர்வுக்கு, பல தேர்வு மையங்களில் விடைத்தாள்கள் வர தாமதமானதாகவும், தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படம் மற்றும் பதிவெண்ணுடன் கூடிய ஓ.எம்.ஆர்., விடைத்தாள்கள் மாற்றி வழங்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்த குழப்பத்தால் சில இடங்களில் செல்போன், புத்தகங்களை பார்த்து சிலர் தேர்வெழுதி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.



இது தொடர்பாக பல அரசியல் கட்சிகள் தேர்வை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த வகையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை (பிப்.,25) நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் வினாத்தாள்களின் பதிவு எண்கள் மாறியிருந்ததன் காரணமாக பல்வேறு குளறுபடிகளுடன் தாமதமாக துவங்கியுள்ளன. இதனால் பல முறைகேடுகள் நடந்துள்ளது.



latest tamil news

அதன் காரணமாக தகுதிவாய்ந்த தேர்வர்கள் தங்கள் வாய்ப்பினை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு போன்ற முக்கிய தேர்வுகளையே முறையாக கையாளத் தெரியாத இந்த நிர்வாகத் திறனற்ற திமுக அரசை வன்மையாக கண்டிப்பதுடன், உடனடியாக அந்த தேர்வை ரத்து செய்து, வேறு ஒருநாளில், உரிய முறையில் மறுதேர்வினை நடத்திட வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

28-பிப்-202301:00:35 IST Report Abuse
மோகனசுந்தரம் இப்படி எல்லாம் பேச உங்களுக்கு வெட்கமாக இல்லையா. நீர் மட்டும் அந்த கூட்டணி கட்சிகளை அரவணைத்து போய் இருந்தால் இந்தத் திருட்டு திராவிட அயோக்கிய கூட்டம் ஆட்சிய பிடித்திருக்குமா. நீரே உன் தலையிலும் மக்கள் தலையிலும் மண்ணை அள்ளிப் போட்டு விட்டீர்.
Rate this:
Cancel
28-பிப்-202301:00:35 IST Report Abuse
மோகனசுந்தரம் இப்படி எல்லாம் பேச உங்களுக்கு வெட்கமாக இல்லையா. நீர் மட்டும் அந்த கூட்டணி கட்சிகளை அரவணைத்து போய் இருந்தால் இந்தத் திருட்டு திராவிட அயோக்கிய கூட்டம் ஆட்சிய பிடித்திருக்குமா. நீரே உன் தலையிலும் மக்கள் தலையிலும் மண்ணை அள்ளிப் போட்டு விட்டீர்.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
27-பிப்-202322:04:36 IST Report Abuse
NicoleThomson நீங்க இப்படியெல்லாம் சத்தம் போட்டு சொன்னால் உங்கள் மீது அவர்களின் நிர்வாகத்தை ஏவி விடுவாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X