காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் வாயிலாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு, திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.
பணியாளர் அரசு தேர்வு ஆணையம், 11 ஆயிரம் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப உள்ளது.
இத்தேர்வில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற தாட்கோ, தனியார் நிறுவனம் வாயிலாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதில், 18 - 32 வயது வரை உள்ள 10ம் வகுப்பு, பிளஸ் 2 அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்கேற்க, www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.