The car caught fire | கார் தீப்பிடித்து நாசம் | Dinamalar

கார் தீப்பிடித்து நாசம் 

Added : பிப் 28, 2023 | |
கும்மிடிப்பூண்டி: ஆந்திர மாநிலம், குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், 37. நான்கு நண்பர்களுடன், 'ஸ்கார்பியோ' காரில், ராமேஸ்வரம் சென்று, வீடு திரும்பி கொண்டிருந்தார்.நேற்று அதிகாலை, சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் அருகே சென்றபோது, காரின் முன் பக்கத்தில் புகை வெளியேறியது.காரை ஓரமாக நிறுத்தியதும், முன் பக்கம் தீப்பிடிக்க துவங்கியது. உடனடியாக
The car caught fire   கார் தீப்பிடித்து நாசம் 



கும்மிடிப்பூண்டி: ஆந்திர மாநிலம், குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், 37. நான்கு நண்பர்களுடன், 'ஸ்கார்பியோ' காரில், ராமேஸ்வரம் சென்று, வீடு திரும்பி கொண்டிருந்தார்.

நேற்று அதிகாலை, சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் அருகே சென்றபோது, காரின் முன் பக்கத்தில் புகை வெளியேறியது.

காரை ஓரமாக நிறுத்தியதும், முன் பக்கம் தீப்பிடிக்க துவங்கியது. உடனடியாக காருக்குள் இருந்த உடமைகளை வெளியே எடுத்து தீயை அணைக்க முயன்றனர்.

மளமளவென தீ பரவியதால், கட்டுக்கு அடங்காமல் கொளுந்து விட்டு எரிந்தது.

தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுதும் தீக்கு இரையானது. கவரைப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X