கொரோனா பரவியது எப்படி? அமெரிக்க ஆய்வில் புதிய தகவல்!

Updated : பிப் 28, 2023 | Added : பிப் 28, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
வாஷிங்டன்: 'சீனாவின் வூஹானில் உள்ள பரிசோதனை மையத்தில் நடந்த சிறிய விபத்து காரணமாகவே, கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது' என, அமெரிக்கா வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.நம் அண்டை நாடான சீனாவின் வூஹானில், 2019 நவம்பரில் முதல் முறையாக கொரோனா வைரஸ் பரவல் துவங்கியது. உலகெங்கும் மிகப் பெரும் பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வாஷிங்டன்: 'சீனாவின் வூஹானில் உள்ள பரிசோதனை மையத்தில் நடந்த சிறிய விபத்து காரணமாகவே, கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது' என, அமெரிக்கா வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



latest tamil news


நம் அண்டை நாடான சீனாவின் வூஹானில், 2019 நவம்பரில் முதல் முறையாக கொரோனா வைரஸ் பரவல் துவங்கியது. உலகெங்கும் மிகப் பெரும் பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பாக குழப்பமான தகவல்களே வெளியாகி வருகின்றன.


அமெரிக்காவின் தேசிய உளவு அமைப்பு, 2021ல் வெளியிட்ட ஆய்வறிக்கையில், சீனாவின் வூஹானில் உள்ள பரிசோதனை மையத்தில் இருந்தே கொரோனா வைரஸ் பரவல் துவங்கியிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. ஆனால், எப்படி பரவல் துவங்கியது என்பது குறித்த தகவல் கிடைக்கவில்லை என, அதில் கூறப்பட்டிருந்தது.



latest tamil news

இந்நிலையில், அமெரிக்க மின்சக்தி அமைப்பு நடத்திய ஆய்வு தொடர்பான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், வூஹானில் உள்ள பரிசோதனை மையத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாகவே கொரோனா வைரஸ் பரவல் துவங்கியுள்ளது என உறுதிபட கூறப்பட்டுள்ளது.


'அமெரிக்காவில் உள்ள மருத்துவ ஆய்வு பரிசோதனை மையங்கள் உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் மின்சக்தி அமைப்பில் மருத்துவ நிபுணர்கள், புலனாய்வு நிபுணர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், இந்த ஆய்வறிக்கை, முழுமையான, உறுதி செய்யப்பட்ட தகவலாக இருக்கும்' என, ஆய்வறிக்கை தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த, 'வால் ஸ்டீர்ட் ஜர்னல்' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.


ஆனால், இந்த அறிக்கையை சீனா நிராகரித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

veeramani - karaikudi,இந்தியா
28-பிப்-202309:54:11 IST Report Abuse
veeramani உலகத்தேயே ஆட்டிப்படைத்த கொரோனா ...தற்போது இதன் நுனிமூலம் சீனா என தெரியவருகின்றது. மற்றைய நாடுகள், இப்போது கடினமான முடிவுகளை நிச்சயம் எடுக்கவேண்டும். சீனா மீ து மூன்றாம் உலகயுத்தம் நடைபெறவேண்டும்.. இல்லாவிட்டால் அனைத்து நாடுகளும் பொருளாதாரத்தடை விதித்து மூன்று அள்ளாது இந்து வருடங்கள் உலக வியாபாரம் தடைசெய்யப்படவேண்டும். சீனாவை ஆசிய கண்டத்தில் இருந்து உடா க்க வேண்டும்.
Rate this:
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
28-பிப்-202311:58:36 IST Report Abuse
Paramanஅமெரிக்கா இனி மெல்ல சாகும்...
Rate this:
enkeyem - sathy,இந்தியா
28-பிப்-202314:55:06 IST Report Abuse
enkeyemஉண்ட வீட்டுக்கே இரண்டகமா?...
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
28-பிப்-202306:15:09 IST Report Abuse
NicoleThomson ஒருகாலத்தில் கெமிக்கல் ஆயுதம் வைத்திருப்பார்கள் என்று நம்பிய ஒரு நாட்டின் மீது படையெடுத்து அந்த நாட்டினை சின்னாபின்னமாக்கிய அமெரிக்க இன்று உலகையே சின்னாபின்னமாக்கிய சீனாவின் மீது முடியாமல் இருப்பதை ஒருவரும் கேட்கமுடியவில்லையே
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
28-பிப்-202304:42:10 IST Report Abuse
Kasimani Baskaran சம்பந்தமே இல்லாத துறைகள் கூட ஆய்வு செய்வதைப்பார்த்தால் ஏதோ சேட்ஜிபிடியிடம் கேட்டு தெரிந்து கொண்டு அதன் பின்னர் ஆய்வு மேற்கொண்டது போல தெரிகிறது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X