பெண்ணையாறு பாலத்தில்  இருந்து விழுந்த முதியவர் பலி

Added : மார் 01, 2023 | |
Advertisement
கடலுார் : கடலுார் அடுத்த உச்சிமேடு வன்னியர் தெரு சீனுவாசன் மகன் பன்னீர்செல்வம் 75; நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்று பொருள்கள் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு பெரிய கங்கணாங்குப்பம் தென்பெண்ணையாறு பாலத்தில் நடந்து சென்றார்.எதிர்பாராதவிதமாக முதியவர் பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். கடைக்கு சென்றவரை காணவில்லை என மகன் எழிலரசன் உள்ளிட்ட உறவினர்கள் பல இடங்களில்

கடலுார் : கடலுார் அடுத்த உச்சிமேடு வன்னியர் தெரு சீனுவாசன் மகன் பன்னீர்செல்வம் 75; நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்று பொருள்கள் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு பெரிய கங்கணாங்குப்பம் தென்பெண்ணையாறு பாலத்தில் நடந்து சென்றார்.

எதிர்பாராதவிதமாக முதியவர் பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். கடைக்கு சென்றவரை காணவில்லை என மகன் எழிலரசன் உள்ளிட்ட உறவினர்கள் பல இடங்களில் தேடினர். அப்போது பாலத்திற்கு கீழ் தலை, கை, கால் ஆகிய இடங்களில் பலத்த காயங்களுடன் முதியவர் கிடந்தார்.

உடனே அவரை கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று காலை அவர் சிகிச்சை பலனில்லாமல் இறந்தார்.

இது குறித்து மகன் எழிலரசன் 39; கொடுத்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X