புகைச்சான்றுக்கு அதிக கட்டணம் ஆர்.டி.ஓ., இழப்பீடு வழங்க உத்தரவு

Added : மார் 01, 2023 | |
Advertisement
திருநெல்வேலி:காருக்கு புகைச் சான்றிதழ் வழங்க அதிக கட்டணம் வசூலித்த நிறுவனம் வட்டார போக்குவரத்து அலுவலர்(ஆர்.டி.ஓ.) ரூ. 10 ஆயிரம் இழப்பீடு வழங்க திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.திருநெல்வேலி மேகலிங்கபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். 2019 அக். 21ல் தன் காருக்கு புகைச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே புகைச்

திருநெல்வேலி:காருக்கு புகைச் சான்றிதழ் வழங்க அதிக கட்டணம் வசூலித்த நிறுவனம் வட்டார போக்குவரத்து அலுவலர்(ஆர்.டி.ஓ.) ரூ. 10 ஆயிரம் இழப்பீடு வழங்க திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருநெல்வேலி மேகலிங்கபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். 2019 அக். 21ல் தன் காருக்கு புகைச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே புகைச் சான்றிதழ் வழங்கும் நைஸ் பேனல் எமிஷன் நிறுவனம் ரூ. 200 கட்டணம் வசூலித்தனர். ஆனால் ரூ. 50க்கு மட்டுமே ரசீது தந்தனர். இது குறித்து கிருஷ்ணன் கேட்டபோது அவதுாறாக பேசினர். இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலரிடம் புகார் செய்தார். அதற்கு அவர் 'இதுபோல ஆயிரம் புகார்கள் வருகிறது இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது' என கூறியுள்ளார்.

எனவே பாதிக்கப்பட்டவர் திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி கிளாஸ்டோன் பிளஸ்ட் தாகூர் உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் ரூ. 10 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் வழக்கு செலவுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டனர். இந்த தொகையை புகைச் சான்று வழங்கிய நிறுவனம் ஆர்.டி.ஓ. தனித்தனியாகவோ இணைந்தோ வழங்கலாம் என உத்தரவில் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X