கோவில்களில் கட்டண உயர்வு: ஹிந்து முன்னணி கண்டனம்
கோவில்களில் கட்டண உயர்வு: ஹிந்து முன்னணி கண்டனம்

கோவில்களில் கட்டண உயர்வு: ஹிந்து முன்னணி கண்டனம்

Updated : மார் 02, 2023 | Added : மார் 02, 2023 | கருத்துகள் (13) | |
Advertisement
திருப்பூர் : ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: திருப்பூர் மாவட்டம், காங்கயம் - சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனத்திற்கான கட்டணம், ஐந்து மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இக்கோவிலில் அன்றாடம், அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.கட்டண தரிசனம், சாதாரண நாட்களில் நபருக்கு, 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. கால
Fee hike in temples: Hindu front condemns  கோவில்களில் கட்டண உயர்வு: ஹிந்து முன்னணி கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருப்பூர் : ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: திருப்பூர் மாவட்டம், காங்கயம் - சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனத்திற்கான கட்டணம், ஐந்து மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இக்கோவிலில் அன்றாடம், அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.


கட்டண தரிசனம், சாதாரண நாட்களில் நபருக்கு, 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. கால பூஜைக்கு, 25 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தற்போது சாதாரண கட்டணம், 10 ரூபாயிலிருந்து, 50 ரூபாயாக, ஐந்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.


இதுகுறித்து முன்னறிவிப்பு ஏதும் வழங்காமலும், முறையான ஆணை இல்லாமலும், திடீரென கட்டண உயர்வு அதிகரித்து வசூலிக்கப்படுவதால் மக்கள், பக்தர்கள் என, பலரும் வேதனைப்படுகின்றனர்.


latest tamil news

தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு வசூல் செய்கின்றனர். இந்த அரசு, கோவிலின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சொத்துக்களை மீட்க வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கை பக்தர்களிடம் உள்ளது. ஆனால், அறநிலையத்துறை அதற்கு முயற்சி செய்யவில்லை. பக்தர்களிடம் கட்டணம் என்ற பேரில், கொள்ளையடிப்பதை ஹிந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

02-மார்-202321:43:44 IST Report Abuse
N SASIKUMAR YADHAV அந்நிய மதத்தார்களுக்கு இந்துமத கோயிலை பற்றி எதற்கு கவலை . கட்டணத்தை ஏற்றி பக்தர்களை வரவிடாமல் தடுத்து மதமாற்றம் செய்வதுதான் கருத்தரின் சீடர் விடியலாரின் கொள்கை.
Rate this:
Cancel
Thirumal Kumaresan - singapore,சிங்கப்பூர்
02-மார்-202318:59:28 IST Report Abuse
Thirumal Kumaresan வன்மையாக கண்டிக்கிறோம்,
Rate this:
Cancel
Devan - Chennai,இந்தியா
02-மார்-202316:55:34 IST Report Abuse
Devan Jai hind you can cry for gas cylinder sometime. This Government is pressing and looting only HINDU people. The. World over petrolium products are very much in demand. and they aren't getting it. Only in India you are getting. Give the money. In Pakistan there is no petrol or gas
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X