சென்னை:சென்னையில் சாலைகள் ஆக்கிரமிப்பு, வாகனங்கள் பெருக்கம் காரணமாக, போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
இத்துடன் வாகன ஓட்டிகள் அதிவேக பயணம், போதையில் பயணம், தவறான பாதைகளில் வாகனங்களை இயக்குதல் போன்ற விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர். பல வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்குகின்றனர்.
இதை குறைப்பதற்காக, சென்னை முழுதும் போக்குவரத்து போலீசார், நேற்றுடன் இரு தினங்களாக, 'ராங் ரூட்' எனப்படும் எதிர் திசையில் வாகனங்களை இயக்குவோர் குறித்து சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, 5,667 வாகன ஓட்டிகள் சிக்கினர். இவர்கள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து, 15.67 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
இரு மாதங்களில் மட்டும், 'ராங் ரூட்'டில் வாகனங்கள் ஓட்டியது தொடர்பாக, 68 ஆயிரத்து, 629 வழக்குகள் பதிவு செய்து, 1.53 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.