7 years imprisonment for the worker who molested the girl | சிறுமியிடம் பாலியல் சீண்டல் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை| Dinamalar

சிறுமியிடம் பாலியல் சீண்டல் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

Added : மார் 03, 2023 | |
ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கூலித்தொழிலாளி குருசாமிக்கு 53, ஏழாண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த குருசாமி 2021 பிப்., 13ல் ராஜபாளையம் அருகேவுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில்

ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கூலித்தொழிலாளி குருசாமிக்கு 53, ஏழாண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த குருசாமி 2021 பிப்., 13ல் ராஜபாளையம் அருகேவுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அவரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கலா ஆஜரானார். குருசாமிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.ஆயிரம் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட நிர்வாகம் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்தும் நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் தீர்ப்பளித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X