ரேஷன் அரிசி, கலப்பட டீசல் கடத்துவதை தடுக்க வாகன சோதனை

Added : மார் 03, 2023 | |
Advertisement
நாமக்கல்,-ரேஷன் அரிசி, கலப்பட டீசல் கடத்துவதை தடுக்க நாமக்கல்லில் தீவிர வாகன சோதனை நடந்தது.தமிழக அரசு வழங்கும் பொது விநியோகத்திட்ட ரேஷன் அரிசி, மண்ணெண்ணய் கடத்தப்படுவதாக புகார் வந்தது. அதே போல் கலப்பட டீசல் கடத்துதல், பதுக்குவது சம்மந்தமாக கடுமையான நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் போலீஸ்


நாமக்கல்,-ரேஷன் அரிசி, கலப்பட டீசல் கடத்துவதை தடுக்க நாமக்கல்லில் தீவிர வாகன சோதனை நடந்தது.

தமிழக அரசு வழங்கும் பொது விநியோகத்திட்ட ரேஷன் அரிசி, மண்ணெண்ணய் கடத்தப்படுவதாக புகார் வந்தது. அதே போல் கலப்பட டீசல் கடத்துதல், பதுக்குவது சம்மந்தமாக கடுமையான நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் போலீஸ் சோதனைசாவடிகளிலும் மற்ற எல்லைப்பகுதிகளிலும், எஸ்.ஐ., சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். சந்தேகத்திற்கு இடமாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டு அனுப்பினர். ஆவணமின்றி ரேஷன் அரிசி எடுத்து வரும் வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், சம்பந்தப்பட்டவர்களையும் கைது செய்து வருகின்றனர். வரும் நாட்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X