30 people recovered from drug addiction | போதை பிடியில் மீண்ட 30 பேர்| Dinamalar

போதை பிடியில் மீண்ட 30 பேர்

Added : மார் 03, 2023 | |
திருப்பூர்,-அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, 30 பேர், போதை பிடியிலிருந்து மீண்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் ஆய்வு செய்த கலெக்டர் வினீத் கூறியதாவது: அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, ஏற்கனவே 670 படுக்கை வசதி; புதிய கட்டடத்தில், 500 படுக்கை வசதி என, மொத்தம் 1,170 படுக்கை வசதிகள் உள்ளன. தினமும், 700 முதல் 750

திருப்பூர்,-அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, 30 பேர், போதை பிடியிலிருந்து மீண்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் ஆய்வு செய்த கலெக்டர் வினீத் கூறியதாவது: அரசு மருத்துவ

கல்லுாரி மருத்துவமனை, ஏற்கனவே 670 படுக்கை வசதி; புதிய கட்டடத்தில், 500 படுக்கை

வசதி என, மொத்தம் 1,170 படுக்கை வசதிகள் உள்ளன. தினமும், 700 முதல் 750 உள்நோயாளிகள்; இரண்டாயிரம் முதல் 2500 வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை

அளிக்கப்படுகிறது.

போதை தடுப்பு பிரிவில், எட்டு பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்; கடந்த மாதம் மட்டும், 30 பேர், குணமடைந்துள்ளனர். ஆதரவற்ற மனநல பிரிவில், 22 பேர் சிகிச்சை பெறும்நிலையில், எட்டு பேர், குணமடைந்து காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X