சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'கொஞ்சம் பயமா தான் இருக்கு!'

Added : மார் 03, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
கரூர் திருமாநிலையூரில், புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார்.அப்போது அவர், 'சூரிய மின்சக்தி உற்பத்தியில், ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக சில தினங்களுக்கு முன், சூரியசக்தி வாயிலாக அதிகளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 'அத்துடன் புதிதாக, 6,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி
பக்கவாத்தியம்

கரூர் திருமாநிலையூரில், புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார்.

அப்போது அவர், 'சூரிய மின்சக்தி உற்பத்தியில், ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக சில தினங்களுக்கு முன், சூரியசக்தி வாயிலாக அதிகளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

'அத்துடன் புதிதாக, 6,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான பணிகளும் துவக்கப்பட்டு உள்ளன. திருவாரூரில் முதல் சூரிய மின் உற்பத்தி பூங்காவை, முதல்வர் துவங்கி வைக்க இருக்கிறார். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன' என்றார்.

மூத்த நிருபர் ஒருவர், 'கோடைக்காலம் ஆரம்பிச்சிடுச்சு... தி.மு.க., ஆட்சின்னாலே மக்களுக்கு, 'கரன்ட் கட் அலர்ஜி' தான் ஞாபகம் வரும்... அதிலும், அமைச்சர்புள்ளி விபரங்களை அள்ளி விடுறதைப் பார்த்தா, கொஞ்சம் பயமா தான் இருக்கு...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

D.Ambujavalli - Bengaluru,இந்தியா
04-மார்-202307:18:33 IST Report Abuse
D.Ambujavalli அமைச்சர் சவடால் புதிதா? மக்களுக்கு வெயிலின் ‘அனல் ‘ தான் நிரந்தரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X