புகார் பெட்டி:மரம் வெட்டியவர் மீது நடவடிக்கை தேவை

Added : மார் 03, 2023 | |
Advertisement
மரம் வெட்டியவர் மீது நடவடிக்கை தேவைதிருக்கழுக்குன்றம் தாலுகா புதுப்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், சத்யா ஷோரூம் எதிரில், மிகவும் பழமையான வேப்பமரம் ஒன்று இருந்தது.அதை, நேற்று அரசு அனுமதி இன்றி, யாரோ ஒருவர் இரவு நேரத்தில் வெட்டிவிட்டார். இந்த மரம் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக இல்லை. பொதுமக்களுக்கு நிழல் தரும்
புகார் பெட்டி:மரம் வெட்டியவர் மீது நடவடிக்கை தேவை


மரம் வெட்டியவர் மீது நடவடிக்கை தேவை


திருக்கழுக்குன்றம் தாலுகா புதுப்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், சத்யா ஷோரூம் எதிரில், மிகவும் பழமையான வேப்பமரம் ஒன்று இருந்தது.

அதை, நேற்று அரசு அனுமதி இன்றி, யாரோ ஒருவர் இரவு நேரத்தில் வெட்டிவிட்டார். இந்த மரம் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக இல்லை.

பொதுமக்களுக்கு நிழல் தரும் மரமாக இருந்த இந்த மரத்தை வெட்டியவர்களின் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மா. கணேசன், திருக்கழுக்குன்றம்.


ஏரிக்கரை குடிநீர் கிணற்றுக்கு மூடி அமைக்க வேண்டுகோள்


சித்தாமுர் அருகே மாம்பக்கம் ஊராட்சிக்குட்பட்ட சித்துார் கிராமத்தில், ஏரிக்கரை பகுதியில், கிராமத்தின் குடிநீர் கிணறு உள்ளது.

சரியாக பராமரிக்காமல், குடிநீர் கிணறு மூடியின்றி காணப்படுகிறது.

இதனால், குடிநீரை பயன்படுத்த, சித்துார் கிராம மக்கள் அச்சப்படுகின்றனர்.

ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், கிணற்றின் மேற்பகுதியில் மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ரா.ரஞ்சித், சித்தாமூர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X