மதுக்கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சேல்ஸ்மேன் படுகாயம்

Added : மார் 04, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூரில் மதுக்கடையில் பெட்ரோல் குண்டு வீசிய, இளைஞரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.காரைக்குடி பள்ளத்தூர் மெயின் ரோட்டில் மதுக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இக்கடையில் மர்ம நபர் ஒருவர் மண்ணெண்ணை பாட்டிலில் தீ வைத்து தூக்கி எரிந்து தப்பிவிட்டார். இதில், பணம் மற்றும் மது பாட்டில்கள்
Petrol bomb, Salesman, petrol,பெட்ரோல், மதுக்கடை, பெட்ரோல் குண்டு, வீச்சு, சேல்ஸ்மேன், படுகாயம்

காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூரில் மதுக்கடையில் பெட்ரோல் குண்டு வீசிய, இளைஞரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


காரைக்குடி பள்ளத்தூர் மெயின் ரோட்டில் மதுக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இக்கடையில் மர்ம நபர் ஒருவர் மண்ணெண்ணை பாட்டிலில் தீ வைத்து தூக்கி எரிந்து தப்பிவிட்டார். இதில், பணம் மற்றும் மது பாட்டில்கள் சேதமானது.


இந்நிலையில் நேற்று இரவு, மதுக்கடைக்கு வந்த இளைஞர் ஒருவர் தான் கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை கடைக்குள் தூக்கி எரிந்தார். இதில், மதுக்கடை சேல்ஸ்மேன் ஆன, இளையான்குடியை சேர்ந்த மாயழகு மகன் அர்ச்சுனன் 46 என்பவர் படுகாயமடைந்தார்.


மேலும், கடையில் இருந்த ரூ.76 ஆயிரத்து 880 பணமும், ரூ. 14 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களும் எரிந்து சேதமானது. பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை, போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் பள்ளத்தூர் சாத்தப்ப செட்டியார் தெருவை சேர்ந்த ராஜசேகர் மகன் ராஜேஷ் பாண்டி 21. என்பது தெரிய வந்தது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

DVRR - Kolkata,இந்தியா
04-மார்-202318:21:04 IST Report Abuse
DVRR எங்கள் வாழ்க்கையின் மிக மிக முக்கிய அங்கமான மதுக்கடை மிக மிக அவசியமானது ஆகவே முதல்வர் உத்தரவின் பெயரில் உடனே கைது செய்தோம், மற்றபடி அந்த ராணுவீரர் கொலை அவ்வளவு அத்தியாவசியமானது இல்லவே இல்லை ஆகவே கைது செய்ய தாமதம் செய்தோ - இப்படிக்கு திருட்டு திராவிட மடியல் அரசியல் வியாதிகள்
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
04-மார்-202314:31:59 IST Report Abuse
Siva சாராயம் விற்பவன் இருந்தா என்ன ...... அவன் குடும்பம் நாசமா ....
Rate this:
Cancel
மோகன் - கென்ட்,யுனைடெட் கிங்டம்
04-மார்-202312:00:00 IST Report Abuse
மோகன் இதுதான் விடியல் ஆட்சி. இராணுவ வீரரை அடித்து கொலை செய்த திமுக பிரமுகரை கைது செய்ய ஒரு வாரம் ஆகியது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X