மதத்தின் பெயரால் வன்முறைகள் முதல்வர் பசவராஜ் பொம்மை கவலை

Added : மார் 05, 2023 | |
Advertisement
சிக்கமகளூரு--''மதத்தின் பெயரால் வன்முறைகள் நடக்கின்றன, இதை அனைவரும் உணர வேண்டும்,'' என முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்.சிக்கமகளூரில் நேற்று ஜெகத்குரு ரேணுகாச்சார்யா ஜெயந்தி விழா நடந்தது.இதில் பங்கேற்ற முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது:வட மாநிலத்தில் காசி என்ற புண்ணிய தலம் இருப்பது போல் தென் மாநிலத்தில் ரம்பாபுரி இருப்பது நமது பாக்கியம். நமது கலாசாரம்,



சிக்கமகளூரு--''மதத்தின் பெயரால் வன்முறைகள் நடக்கின்றன, இதை அனைவரும் உணர வேண்டும்,'' என முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்.

சிக்கமகளூரில் நேற்று ஜெகத்குரு ரேணுகாச்சார்யா ஜெயந்தி விழா நடந்தது.

இதில் பங்கேற்ற முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது:

வட மாநிலத்தில் காசி என்ற புண்ணிய தலம் இருப்பது போல் தென் மாநிலத்தில் ரம்பாபுரி இருப்பது நமது பாக்கியம்.

நமது கலாசாரம், பண்பாடு போன்றவை, நமது வளமான எதிர்காலத்திற்கு அடித்தளம் ஆகும். மனசாட்சிப்படி உண்மையின் பாதையில் நடப்பவர்கள் தான் உண்மையான குருக்கள்.

சமுதாயத்தில் ஜாதி, மாத பேதங்களை போக்கி நல்லிணக்கத்தை ஏற்படுத்த இந்த மடம் பணியாற்றி வருகிறது. எடியூரப்பா முதல்வராக இருந்த போது, ஹிந்து மடங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், ஹஜ் பவன் போன்றவற்றுக்கு 40 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது.

மதங்களால் தான் உலக அமைதி ஏற்படும் என்பதை அனைவரும் அறிய வேண்டும். இன்றைய சூழ்நலையில் மதத்தின் பெயரில் வன்முறைகள் நடக்கின்றன.

இத்தகைய செயல்களில் ஈடுபடுவோரின் மனநிலையை மாற்ற வேண்டும். இந்த பணி மத தலைவர்களால் மட்டுமே செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X