பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு; பயணியர் பாதிப்பு

Added : மார் 06, 2023 | |
Advertisement
பராமரிப்பில்லாத கழிப்பிடம்உடுமலை பஸ்ஸ்டாண்டில், திருப்பூர் பஸ்கள் நுழையுமிடத்தில் நகராட்சி இலவச பொதுக்கழிப்பிடம் உள்ளது. இக்கழிப்பிடம் பராமரிப்பில்லாமல் இருப்பதால், மக்கள் பயன்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். எனவே, நகராட்சியினர் இக்கழிப்பிடத்தை பராமரிக்க வேண்டும்.- முருகன், உடுமலை. சுகாதாரம் பாதிப்புஉடுமலை, கொழுமம் பிரிவு ரோட்டோரத்தில்
 பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு; பயணியர் பாதிப்பு


பராமரிப்பில்லாத கழிப்பிடம்



உடுமலை பஸ்ஸ்டாண்டில், திருப்பூர் பஸ்கள் நுழையுமிடத்தில் நகராட்சி இலவச பொதுக்கழிப்பிடம் உள்ளது. இக்கழிப்பிடம் பராமரிப்பில்லாமல் இருப்பதால், மக்கள் பயன்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். எனவே, நகராட்சியினர் இக்கழிப்பிடத்தை பராமரிக்க வேண்டும்.

- முருகன், உடுமலை.


சுகாதாரம் பாதிப்பு



உடுமலை, கொழுமம் பிரிவு ரோட்டோரத்தில் பிளாஸ்டிக் குப்பைக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் சுகாதாரம் பாதிக்கப்படுவதோடு, குப்பைக்கழிவுகள் ரோட்டில் பறந்து குவிகிறது. நோய்களும் பரவ வாய்ப்புள்ளது.

- முத்துசெல்வி, உடுமலை.


அடையாளம் வேண்டும்



உடுமலை, எஸ்.வி.,புரம் நால்ரோட்டில், வேகத்தடை அடையாளம் இல்லாமல் இருப்பதால், இரவு நேரங்களில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வாகன ஓட்டுனர்கள் தடுமாறுகின்றனர். எனவே, வேகத்தடைக்கு அடையாளமிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கதிரவன், உடுமலை.


போக்குவரத்து நெரிசல்



உடுமலை, பசுபதி வீதியில் தனியார் வணிக நிறுவனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து பொருட்களை வைத்துள்ளன. இதனால் மற்ற வாகன ஓட்டுனர்கள் ரோட்டில் செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகிறது.

- பவித்ரா, உடுமலை.


நடைபாதையில் ஆக்கிரமிப்பு



உடுமலை பஸ் ஸ்டாண்டுக்குள் மக்கள் காத்திருக்கும் பகுதியில், நடைபாதை கடைகள் போடப்படுகின்றன. இதனால், அங்கு பஸ் ஏற வரும் பொதுமக்கள், பயணியர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, நடைபாதை ஆக்கிரமிப்புகளை நகராட்சியினர் அகற்ற வேண்டும்.

- சுப்பிரமணி, உடுமலை.


முறையாக எரியவில்லை



உடுமலை, குறிச்சிக்கோட்டையிலிருந்து சின்னகுமாரபாளையம் செல்லும் ரோட்டில் மின் விளக்குகள் குறைவாக எரிகின்றன. இதனால் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்வோருக்கு விபத்து அபாயம் உள்ளது. எனவே, மின்வாரியத்தினர் கண்காணித்து மின்விளக்குகளை முழுமையாக எரியச்செய்ய வேண்டும்.

- கண்ணன், உடுமலை.


காற்றில் பறக்கும் பஞ்சுகள்



உடுமலை, போடிபட்டி மகளிர் திட்ட அலுவலகம் அருகே தனியார் கம்பெனியிலிருந்து துாசுபஞ்சுகள் அதிகமாக பறந்து ரோட்டிலும், குடியிருப்புகளிலும் குவிகிறது. இதனால் அப்பகுதியினருக்கு சுவாச நோய்கள் ஏற்படுவதற்கான சூழல் உருவாகிறது. இதை அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும்.

- அருள்மொழி, போடிபட்டி.


விதிமுறை மீறும் வாகனங்கள்



உடுமலை, பஸ் ஸ்டாண்டில் விதிமுறை மீறி இரண்டு சக்கர வாகன ஓட்டுனர்கள் பயன்படுத்துகின்றனர். இதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதோடு, பஸ்சுக்கு அவசரமாக செல்லும்போது விபத்து ஏற்படுகிறது. இதை போலீசார் ஒழுங்குபடுத்த வேண்டும்.

- ஸ்ரீதர், உடுமலை.


வேகத்தடை வேண்டும்



உடுமலை, மலையாண்டிகவுண்டனுார் நால்ரோட்டில் வேகத்தடை இல்லாததால், இரண்டு பக்கத்திலிருந்தும் வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. வாகன ஓட்டுனர்களும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, அங்கு வேகத்தடையை நெடுஞ்சாலைத்துறையினர் அமைக்க வேண்டும்.

- மாரிமுத்து, உடுமலை.


வாகன ஓட்டுனர்கள் பாதிப்பு



உடுமலை, சர்தார் வீதியில் பாதாள சாக்கடை குழிகள் சீரமைக்கப்பட்டு, அடையாளம் வைக்காமல் விடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டுனர்களுக்கு அபாயமாக உள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சூர்யா, உடுமலை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X