மணீஷ் சிசோடியாவை மார்ச் 20 வரை திகார் சிறையில் அடைக்க உத்தரவு

Updated : மார் 06, 2023 | Added : மார் 06, 2023 | கருத்துகள் (12) | |
Advertisement
புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான மணீஷ் சிசோடியாவை மார்ச் 20 வரை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டில்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கோர்ட் உத்தரவுப்படி சிபிஐ அதிகாரிகள் காவலில் எடுத்து, மணீஷ்

புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான மணீஷ் சிசோடியாவை மார்ச் 20 வரை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.



latest tamil news


டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டில்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கோர்ட் உத்தரவுப்படி சிபிஐ அதிகாரிகள் காவலில் எடுத்து, மணீஷ் சிசோடியாவை விசாரித்தனர். தொடர்ந்து அவர் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.



latest tamil news


விசாரணை முடிந்த நிலையில் இன்று( மார்ச் 06) மணீஷ் சிசோடியா டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது மார்ச் 20 வரை சிசோடியாவை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.


பகவத்கீதை படிக்க அனுமதி: @

@

டில்லியில் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட, டில்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா சிறையில் படிக்க பகவத்கீதை, மற்றும் பேனா, மூக்கு கண்ணாடியும் வேண்டுமென நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியது.


தொடர்ந்து, சிறப்பு நீதிபதி நாக்பால் கூறும்போது, சிசோடியா தனக்கு தேவையான மருந்துகளை உடன் எடுத்து செல்லவும் அனுமதி அளிக்கப்படுகிறது.

தியானம் செய்யும் அறையில் தன்னை வைத்திருக்க வேண்டும் என சிசோடியா தரப்பில் விடுத்த வேண்டுகோளை, சிறை கண்காணிப்பாளர் பரிசீலனை செய்யும் படியும் நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

Indhuindian - Chennai,இந்தியா
07-மார்-202305:09:54 IST Report Abuse
Indhuindian சட்டு புட்டுன்னு இந்த ரெண்டு மந்திரிங்க கேச முடிச்சு அந்த ஆம் ஆத்மி கட்சியை அவங்க தொடப்பக்கட்டையாலயே விரட்டி அடிச்சாதான் டெல்லி உருப்படும் ஜனங்களும் நிம்மதியா இருப்பாங்க
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
07-மார்-202305:08:06 IST Report Abuse
Indhuindian அங்கேதான் ஏற்கனவே நல்ல பயிற்சியுள்ள மசாஜ் பண்றவங்க மத்தபடி எல்லாத்துக்கும் அவருக்கு முன்னாடி போன மந்திரி ஏற்பாடு பண்ணிட்டார் என்ஜாய்
Rate this:
Cancel
Krishnamoorthy Nilakantan - Michigan,யூ.எஸ்.ஏ
06-மார்-202322:03:13 IST Report Abuse
Krishnamoorthy Nilakantan நடிச்சது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் மாதிரி செய்தது ஊழல் பரிகாரம் பகவத்கீதையா? கர்மா பின் தொடர்ந்து தண்டனை அளிக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X