'ஹவுஸ் ஒய்ப்' என்பதை தாண்டி சுய அடையாளம் வேண்டும்!

Updated : மார் 07, 2023 | Added : மார் 07, 2023 | |
Advertisement
நம்மைச் சுற்றி நடக்கும் பல விஷயங்களில் புதுப் புது தொழிலுக்கான வாய்ப்புகள் உள்ளன. அதைக் கண்டுகொண்டு அதில் தொடர்ந்து கவனத்தையும், உழைப்பையும் செலுத்தினால் நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம் என்பதற்கு உதாரணம் திருப்பூரைச் சேர்ந்த சிவப்பிரியா (25).தங்கள் குழந்தைகளை பொக்கிஷமாக நினைக்கும் பெற்றோர்கள், கர்ப்பமடைந்ததிலிருந்து அதன் வளர்ச்சியை போட்டோஷூட் செய்து
Need self identity beyond house wife!  'ஹவுஸ் ஒய்ப்' என்பதை தாண்டி சுய அடையாளம் வேண்டும்!

நம்மைச் சுற்றி நடக்கும் பல விஷயங்களில் புதுப் புது தொழிலுக்கான வாய்ப்புகள் உள்ளன. அதைக் கண்டுகொண்டு அதில் தொடர்ந்து கவனத்தையும், உழைப்பையும் செலுத்தினால் நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம் என்பதற்கு உதாரணம் திருப்பூரைச் சேர்ந்த சிவப்பிரியா (25).

தங்கள் குழந்தைகளை பொக்கிஷமாக நினைக்கும் பெற்றோர்கள், கர்ப்பமடைந்ததிலிருந்து அதன் வளர்ச்சியை போட்டோஷூட் செய்து காட்சிப்படுத்த துவங்கி விடுகின்றனர். இது முதல் மாத பிறந்த நாள் முதல் மூன்றாவது பிறந்த நாள் வரை தொடர்கிறது. போட்டோசூட்டின் போது குழந்தையை இன்னும் க்யூட்டாக காட்ட நிறைய ஆக்சசரிஸ் பயன்படுத்துகின்றனர். அதில் ஒன்று தான் ‛புளோரல் பேண்ட்' எனும் தலையில் அணியும் அலங்கார பொருள். இது இப்போது ரொம்பவே டிரெண்ட். இதனை ஹாபியாக செய்ய ஆரம்பித்து, தொழில்முனைவோராக மாறி, இளம் பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்த சிவப்பிரியா.


latest tamil news

பியோதெரபிஸ்ட்டான இவர், லாக்டவுனில் பொழுதுபோக்காக செய்ய ஆரம்பித்து இதனை முழு நேர தொழிலாக்கி வெற்றிநடை போடுகிறார். அவரிடம் பேசியதில் இருந்து...


சிறு வயதில் கிராப்ட் வேலைப்பாடுகளில் ஆர்வம் இருந்ததால் என்னோட கிரியேட்டிவிட்டியையும் இதில் சேர்த்துக்கிட்டேன். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து நல்ல ரெஸ்பான்ஸ். ஒரு நாளைக்கு 20 ஆடர்ஸ் வரை வரும். குழந்தைகள் பர்த்டே டிரஸ் முன்னாடியே அனுப்பி விட்டு இந்த காம்பினேசன்ல வேணும்னு கேட்பாங்க. பிறந்த குழுந்தைளுக்கான அத்தனை அணிகலன்களும் கிடைக்கும். பெண்களுக்கான ஹேர் பேண்ட், ேஹர் கிலிப், அணுகலன்கள், சிலிங் பேக், ஹேண்ட் பேக்கும் செய்வேன்.


latest tamil news

‛ஆதுஸ் ட்ரிங்கெட்ஸ்' என்ற பெயரில் சமூக வலைதளங்களில் தயாரிப்புகளை போட, நல்ல வரவேற்பு கிடைக்கிறது. கோவை, திருப்பூர், சென்னைணு முக்கிய நகரங்கள், பிற மாநிலங்கள், அந்தமான் நிகோபார், மலோசியாவில் இருந்தும் ஆடர்ஸ் வருகிறது. 6 ஆயிரம் ஆர்டர்கள் தாண்டியிருக்கு.


latest tamil news

கோவையில் இருந்து ஒரு இஸ்லாமிய பெற்றோர் தங்களின் குழந்தைக்கு ராதை வேஷம் போட்டு போட்டோ எடுக்கணும்னு, அலங்கார பொருட்களை ஆர்டர் செய்து, வாங்கினாங்க. ‛எதையும் தலையில் வைக்க கூடாதுனு அழுவாள். உங்க அணிகலன்களை ரொம்ப நேரம் அழாமல் போட்டுக்கிட்டா. அசவுகரியமாக பீல் பண்ணல'னு பாராட்டுனாங்க.


latest tamil news

என் பெற்றோரின் ஆசைக்காக பிசியோதெரபிஸ்ட் ஆனேன். இப்போது பிசினஸில் சாதிக்கனுமுங்கற என் லட்சிய பாதையல் பயணிக்கிறேன். அதில் ஜெய்ச்சும் காட்டினேன். இக்கலையை நிறைய பேருக்கு கொண்டு சேர்ப்பதுதான் அடுத்தகட்ட முயற்சி.

வீட்டிலிருக்கும் பெண்களை, 'ஹவுஸ் ஒய்ப்'னு சொல்ற காலம் மலையேறிவிட்டது. அதையும் தாண்டி, பிடிச்ச விசயத்தை பேஷனாக்கி, அதில் தனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக்க ஒவ்வொரு பெண்ணும் நினைக்கனும்' என்கிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X