3,618 பேருக்கு ஓய்வூதியம் வழங்க பரிந்துரை

Added : மார் 09, 2023 | |
Advertisement
சென்னை:நகர்ப்புற உள்ளாட்சிகளில் பணிபுரிந்த, 3,618 பணியாளர்களுக்கு, தகுதி வாய்ந்த ஓய்வூதியப் பலன்களை வழங்கும்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் சிவ்தாஸ் மீனா, உள்ளாட்சி நிதி தணிக்கை இயக்குனருக்கு, கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:சென்னை மாநகராட்சி தவிர்த்து, பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், 1997 ஏப்.,30க்கு பின் பலர்,

சென்னை:நகர்ப்புற உள்ளாட்சிகளில் பணிபுரிந்த, 3,618 பணியாளர்களுக்கு, தகுதி வாய்ந்த ஓய்வூதியப் பலன்களை வழங்கும்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் சிவ்தாஸ் மீனா, உள்ளாட்சி நிதி தணிக்கை இயக்குனருக்கு, கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சி தவிர்த்து, பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், 1997 ஏப்.,30க்கு பின் பலர், தொகுப்பூதிய பணியில் அமர்த்தப்பட்டனர்.

இவர்கள், 2003 ஏப்.,1க்கு முன், முறையான ஊதிய விகிதத்திற்கு மாற்றப்பட்டனர்.

இவர்கள், தகுதி வாய்ந்த ஓய்வூதிய பலன்கள், அவர்களின் வாரிசுதாரர்கள் குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள் என, நகராட்சி நிர்வாக இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

அதையேற்று, 1,779 நகராட்சி பணியாளர்கள், மாநகராட்சிகளை சேர்ந்த, 1,839 பணியாளர்களுக்கு, தகுதி வாய்ந்த ஓய்வூதியப் பலன்களை வழங்க, பரிந்துரைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X