3 3 industrial projects awaiting building clearance | கட்டட அனுமதிக்கு காத்திருக்கும் 3 3 தொழிற்சாலை திட்டங்கள்| Dinamalar

கட்டட அனுமதிக்கு காத்திருக்கும் 3 3 தொழிற்சாலை திட்டங்கள்

Added : மார் 09, 2023 | |
சென்னை:தமிழகத்தில், ஏழு மாவட்டங்களில், 33 தொழிற்சாலை திட்டங்கள், கட்டட அனுமதிக்காக காத்திருப்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., வாயிலாக, கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தொழிற்சாலை திட்டங்களுக்கு விரைவாக
3 3 industrial projects awaiting building clearance   கட்டட அனுமதிக்கு காத்திருக்கும் 3 3 தொழிற்சாலை திட்டங்கள்

சென்னை:தமிழகத்தில், ஏழு மாவட்டங்களில், 33 தொழிற்சாலை திட்டங்கள், கட்டட அனுமதிக்காக காத்திருப்பது தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., வாயிலாக, கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தொழிற்சாலை திட்டங்களுக்கு விரைவாக அனுமதி அளிக்கும் நடைமுறை உருவாக்கப்பட்டது.

இதற்காக, ஒற்றை சாளர முறையில் கட்டட அனுமதி உள்ளிட்ட அனைத்து அனுமதியும் வழங்கப்படுகிறது.

இதில், ஆன்லைன் முறையில் வரும் விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து, உரிய முடிவு எடுக்க வேண்டும் என, சி.எம்.டி.ஏ., - டி.டி.சி.பி., அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, ஏழு மாவட்டங்களில், 33 தொழில் திட்டங்கள் கட்டட அனுமதிக்காக காத்திருக்கின்றன.

இவற்றில் டி.டி.சி.பி.,யில், 27 திட்டங்களும், சி.எம்.டி.ஏ.,வில், ஆறு திட்டங்களும் ஒப்புதலுக்காக காத்திருப்பது தெரிய வந்துஉள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X