5 people injured in Sayalkudi chasing donkey | விரட்டிக்கடிக்கும் கழுதை சாயல்குடியில் 5 பேர் காயம் | Dinamalar

விரட்டிக்கடிக்கும் கழுதை சாயல்குடியில் 5 பேர் காயம்

Added : மார் 09, 2023 | |
சாயல்குடி:ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி நகர்பகுதியில் கடந்த மூன்று நாட்களாக வெறிப்பிடித்த கழுதை ஒன்று அப்பகுதியில் வருவோர் போவோரை விரட்டிக் கடித்து வருகிறது. இதுவரை 5பேர் காயமடைந்துள்ளனர்.சாயல்குடி நகர் பகுதிகளில் காலை, மாலையில் ஏராளமான நாய்கள் கூட்டமாக திரிகின்றன. இத்துடன் தற்போது 5 வயதான ஆண் கழுதை ஒன்று தெருவில் நடந்து சென்ற 5 ஆண்களை விரட்டிக்கடித்து காலால்
5 people injured in Sayalkudi chasing donkey   விரட்டிக்கடிக்கும் கழுதை சாயல்குடியில் 5 பேர் காயம்

சாயல்குடி:ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி நகர்பகுதியில் கடந்த மூன்று நாட்களாக வெறிப்பிடித்த கழுதை ஒன்று அப்பகுதியில் வருவோர் போவோரை விரட்டிக் கடித்து வருகிறது. இதுவரை 5பேர் காயமடைந்துள்ளனர்.

சாயல்குடி நகர் பகுதிகளில் காலை, மாலையில் ஏராளமான நாய்கள் கூட்டமாக திரிகின்றன. இத்துடன் தற்போது 5 வயதான ஆண் கழுதை ஒன்று தெருவில் நடந்து சென்ற 5 ஆண்களை விரட்டிக்கடித்து காலால் உதைத்துஉள்ளது.

காயமடைந்தவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.

ஆட்டோ டிரைவர் முகம்மது ரபீக் கூறியதாவது; சாயல்குடியில் சுற்றித்திரியும் வெறிபிடித்த கழுதையால் பொதுமக்கள் பஜாரில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். கழுதையை பிடித்து சிகிச்சையளிக்க பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X