புளி சீசன் துவங்கியும் வரத்தின்றிவிலை உயர்வு: கிலோ ரூ.120

Added : மார் 09, 2023 | |
Advertisement
ராமநாதபுரம்--ராமநாதபுரம் சந்தைக்கு சீசனை முன்னிட்டு, வெளியூர்களிலிருந்து புளி வரத்து துவங்கியுள்ளது. இருப்பினும் வரத்து குறைவால் ஒரு கிலோ ரூ.120 வரை விற்கிறது. சீசனை முன்னிட்டு, ராமநாதபுரம், நயினார்கோவில், பரமக்குடி பகுதிகளில் புளிமரங்களில் காய்ப்பு துவங்கியுள்ளது. இதேப்போல சந்தைக்கு திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில்இருந்து புளி விற்பனை வருகிறது. இருப்பினும்
 புளி சீசன் துவங்கியும் வரத்தின்றிவிலை உயர்வு: கிலோ ரூ.120



ராமநாதபுரம்--ராமநாதபுரம் சந்தைக்கு சீசனை முன்னிட்டு, வெளியூர்களிலிருந்து புளி வரத்து துவங்கியுள்ளது. இருப்பினும் வரத்து குறைவால் ஒரு கிலோ ரூ.120 வரை விற்கிறது.

சீசனை முன்னிட்டு, ராமநாதபுரம், நயினார்கோவில், பரமக்குடி பகுதிகளில் புளிமரங்களில் காய்ப்பு துவங்கியுள்ளது. இதேப்போல சந்தைக்கு திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில்இருந்து புளி விற்பனை வருகிறது.

இருப்பினும் கடந்த ஆண்டை காட்டிலும் வரத்து குறைவாக உள்ளதால் ஒரு கிலோவிற்கு ரூ.20 வரை விலை உயர்ந்துள்ளது.

தற்போது ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை தரத்திற்குஏற்ப விற்கப்படுகிறது. விலை அதிகரிப்பால் விற்பனை மந்தமாகியுள்ளது. வரும் ஏப்ரல், மே வரை சீசன் உள்ளதால் புளி விலை குறைய வாய்ப்புள்ளது, என வியாபாரிகள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X