என்னை விசாரிக்க அமலாக்கத்துறை அவசரம்: முதல்வர் மகள் கவிதா 'விரக்தி'

Updated : மார் 09, 2023 | Added : மார் 09, 2023 | கருத்துகள் (31) | |
Advertisement
புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக, என்னை விசாரிக்க அமலாக்கத்துறை அவசரப்படுகிறது என தெலுங்கானா முதல்வர் மகள் கவிதா கூறியுள்ளார்.புதுடில்லியில் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இது தொடர்பாக டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மதுபான கொள்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up

புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக, என்னை விசாரிக்க அமலாக்கத்துறை அவசரப்படுகிறது என தெலுங்கானா முதல்வர் மகள் கவிதா கூறியுள்ளார்.




latest tamil news


புதுடில்லியில் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இது தொடர்பாக டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு, இன்று(மார்ச் 09) நேரில் ஆஜராகும்படி, தெலுங்கானா முதல்வரின் மகள் கவிதாவுக்கு, அமலாக்கத் துறை, 'சம்மன்' அனுப்பியிருந்தது.


இதையடுத்து, விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து தெலுங்கானா முதல்வரின் மகள் கவிதா கால அவகாசம் கோரி, அமலாக்கத்துறையிடம் கோரிக்கை விடுத்தார். இதை அமலாக்கத்துறை ஏற்று கொண்டது.



latest tamil news


இந்நிலையில் தெலுங்கானா முதல்வரின் மகள் கவிதா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஒரு பெண்ணை விசாரிக்க வேண்டுமானால், அவளுடைய வீட்டில் உரிய அனுமதியுடன் விசாரிக்க வேண்டும். விசாரணைக்கு, இன்று(மார்ச் 09) நேரில் ஆஜராகும்படி, அமலாக்கத் துறை, 'சம்மன்' அனுப்பியிருந்தது. இதையடுத்து மார்ச் 11ம் தேதி என் வீட்டிற்கு விசாரணைக்கு வரலாம் என்று அமலாக்கத்துறையிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் எனக் கூறினார்கள்.


மார்ச் 16ம் தேதிக்கு நேரில் ஆஜராக அனுமதி கோரினேன். ஆனால் என்னை விசாரிக்க அமலாக்கத்துறை அவசரப்படுகிறது. இதற்கு பின்னால் இருக்கும் காரணம் எதுவும் தெரியவில்லை. அதனால் மார்ச் 11ம் தேதிக்கு ஒப்புக்கொண்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

தாமரை மலர்கிறது - தஞ்சை,கனடா
10-மார்-202300:19:56 IST Report Abuse
தாமரை மலர்கிறது போலீசை கண்டால், திருடன் தான் பயப்படுவான். உனக்கு ஏன் இந்த பயம்? குற்றம் செய்த நெஞ்சு குறுகுறுக்கும்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
09-மார்-202321:08:14 IST Report Abuse
M  Ramachandran சில விளக்கு கம்பங்கள் அதன் வேலையை செவ்வனே செய்கிறது .
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
09-மார்-202321:05:30 IST Report Abuse
M  Ramachandran நீங்கள் முதல் மந்திரி மகள் என்று பார்த்து சாராயம் வியாபாரியாக மாறினீர்கள் . அப்போது நீங்கள் என்ன வியாபாரம் செய்தாலும் கேள்வி கேட்கக் கூடாது . ஏதோ கூறுகிறார்களே சட்டத்தின் முன்பு எல்லோரும் சரி நிகர் என்று. அது பற்றி நீங்கள் நீதி மன்றம் எப்படி நடக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். சிறிது விளக்க மாக கூறுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X