ஒரு மாதத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலர் தேர்தல்
ஒரு மாதத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலர் தேர்தல்

ஒரு மாதத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலர் தேர்தல்

Added : மார் 10, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை: அ.தி.மு.க. பொதுச் செயலர் தேர்தலை ஒரு மாதத்துக்குள் நடத்தி முடிக்க அக்கட்சி இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமி முடிவு செய்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பின் அ.தி.மு.க. மாவட்ட செயலர்கள் கூட்டம் நேற்று சென்னையில் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. காலை 11:10 மணிக்கு துவங்கிய கூட்டம் பகல் 12:30 மணிக்கு முடிந்தது.கூட்டத்திற்கு தலைமை வகித்து பழனிசாமி
ADMK general secretary election in a month  ஒரு மாதத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலர் தேர்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: அ.தி.மு.க. பொதுச் செயலர் தேர்தலை ஒரு மாதத்துக்குள் நடத்தி முடிக்க அக்கட்சி இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பின் அ.தி.மு.க. மாவட்ட செயலர்கள் கூட்டம் நேற்று சென்னையில் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. காலை 11:10 மணிக்கு துவங்கிய கூட்டம் பகல் 12:30 மணிக்கு முடிந்தது.


கூட்டத்திற்கு தலைமை வகித்து பழனிசாமி பேசியுள்ளதாவது: சிறுபான்மையின மக்கள் ஓட்டு நமக்கு வராததால் இடைத்தேர்தலில் நமக்கு சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போது அரசு மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள கோபத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


மக்களுக்கு எதிரான அரசின் செயல்பாடுகளை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். கட்சிக்கு யார் வந்தாலும் சேர்க்க வேண்டும். பொதுச் செயலர் தேர்தலை முதலில் நடத்துவோம். அதன்பின் கட்சி அமைப்பு ரீதியாக தேர்தல் நடத்தப்படும். இது தொடர்பாக முறையான அறிவிப்பு வரும். இவ்வாறு பழனிசாமி பேசியதாக தெரிகிறது.


latest tamil news

ஒரு மாதத்துக்குள் பொதுச் செயலர் தேர்தலை நடத்தி முடித்து ஆவணங்களை தேர்தல் கமிஷனில் சமர்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான சட்டப் பணிகளை ஒருங்கிணைக்க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.


கட்சி தேர்தல் நடத்துவதற்காக பொதுச் செயலர் பழனிசாமி கையெழுத்திட்ட உறுப்பினர் அட்டைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அதில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா பழனிசாமி படங்கள் இடம் பெற்றுள்ளன.


மொபைல் போனுக்கு தடை

கூட்டத்துக்கு வந்த மாவட்ட செயலர்களிடம் அவர்களது மொபைல் போன்களை அலுவலக ஊழியர்கள் பெற்றுக் கொண்டனர். கூட்ட அரங்குக்குள் போன் எடுத்து செல்ல அனுமதி கிடையாது என்றனர். கூட்டத்தில் பேசப்படும் விஷயங்கள் வெளியில் செல்வதை தடுக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (3)

Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
10-மார்-202314:27:43 IST Report Abuse
Ramaraj P கட்சி எங்கே உடைந்தது. 5000 பொதுக்குழு உறுப்பினர்களில் 4900 பேர் எப்படி தலைவராக வர வேண்டும் என ஆதரவு அளித்து இருக்கிறார்கள்.
Rate this:
Cancel
Tamil Selvan - Salem,இந்தியா
10-மார்-202311:40:19 IST Report Abuse
Tamil Selvan இவரு OPS ஐ B டீம் என்று சொல்லுகிறார் உண்மையை சொல்ல போனால் இவருக்கும் ஸ்டாலினிக்கும் ஒரே ஒப்பந்தம் அண்ணாமலையை எப்படியாவது பதவியில் இருந்து அப்புற படுத்திவிடவேண்டும். இவர்கள் ரெண்டு பேருமே மாறி மாறி கொள்ளை அடிக்கலாம் என்று நினைக்கிறார்கள்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
10-மார்-202305:01:45 IST Report Abuse
Kasimani Baskaran பொதுச்செயலாளரோ புதுச்செயலாளரோ கட்சியை உடைத்து தீம்காவுக்கு உதவி செய்கிறார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X