சென்னை :மயிலாப்பூர், பஜார் வீதியில் உள்ள கோலவிழியம்மன் கோவிலில், ஆண்டுதோறும், கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழாவிற்கு முன், மாசி மாத மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை, 1,008 பால் குட பாலாபிஷேகம் நடப்பது வழக்கம்.
இதையடுத்து, இன்று காலை 8:00 மணிக்கு, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து, 1,008 பால் குடங்களை பக்தர்கள் சுமர்ந்து, முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக கோலவிழியம்மன் கோவிலை அடைகின்றனர்.
தொடர்ந்து, உற்சவ மூர்த்திகளுக்கு பக்தர்கள் பாலாபிஷேகம் செய்து, நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.
இன்று இரவு, கோலவிழியம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.