ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் இன்று(மார்ச் 12) கைது செய்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் இலங்கை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது அவ்வழியாக ரோந்து பணிக்காக வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 2 படகுகளில் இருந்த 16 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும் மீனவர்களிடம் இருந்து 2 விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.