Train traffic affected due to power line falling | மின் கம்பி அறுந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிப்பு| Dinamalar

மின் கம்பி அறுந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிப்பு

Added : மார் 13, 2023 | |
நாகர்கோவில் : மின் கம்பி அறுந்து விழுந்தததால் நாகர்கோவில் - திருவனந்தபுரம் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து நேற்று காலை கடுமையாக பாதிப்புக்குள்ளானது.நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில்வே லைனில் பூக்கடை பகுதியில் நேற்று காலை 8:30 மணியளவில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் இந்த லைனில் ரயில்களை இயக்க முடியவில்லை.சென்னை - கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் நாகர்கோவில்



நாகர்கோவில் : மின் கம்பி அறுந்து விழுந்தததால் நாகர்கோவில் - திருவனந்தபுரம் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து நேற்று காலை கடுமையாக பாதிப்புக்குள்ளானது.

நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில்வே லைனில் பூக்கடை பகுதியில் நேற்று காலை 8:30 மணியளவில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் இந்த லைனில் ரயில்களை இயக்க முடியவில்லை.

சென்னை - கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் டவுன், திருநெல்வேலி - ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் வள்ளியூர் ரயில்வே ஸ்டேஷன்களில் நிறுத்தப்பட்டன.

கன்னியாகுமரியில் இருந்து நேற்று காலை 8:40 மணிக்கு புறப்படயிருந்த புனே எக்ஸ்பிரஸ், பெங்களூரு ஐலன்ட் எக்ஸ்பிரஸ் நிறுத்தி வைக்கப்பட்டு நேற்று மதியம் 12:00 மணிக்கு பிறகு இயக்கப்பட்டன.

திருவனந்தபுரம் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டது. மின்கம்பிகள் சீரமைக்கப்பட்ட மதியத்திற்கு பிறகு ரயில் போக்குவரத்து சீரானது. நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி வழியாக செல்லும் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.

மின்கம்பி அறுந்ததற்கான காரணங்களை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X